“விராட் கோலியை அனுப்பிட்டு.. ரோகித் சர்மாவ இதுக்காகத்தான் கேப்டன் ஆக்கினேன்” – கங்குலி ஓபன் ஸ்பீச்

0
1347
Virat

இந்திய கிரிக்கெட்டில் சூறாவளி அடித்த தருணங்கள் சில உள்ளன. இரண்டாயிரத்திற்கு பிறகு ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை, மற்றும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை, இந்திய கிரிக்கெட்டில் பெரிய சூறாவளியை அதிர்ச்சியை உருவாக்கியது.

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டை பாதித்த விஷயம் எதுவென்றால் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, புதிய கேப்டனாக ரோகித் சர்மா வந்த காலகட்டம்தான் இருந்தது.

- Advertisement -

விராட் கோலி முதலில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின்னால், அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இருக்கிறார் என்று பலரும் பேசினார்கள்.

விராட் கோலி இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2021 ஆம் ஆண்டு தாமாக விலகினார். இதற்கு அடுத்து வெள்ளைப் பந்து வடிவத்திற்கு தனித்தனி கேப்டன் வைக்க முடியாது எனக் கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது.

பிறகு விராட் கோலி அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக இருந்து, அந்தத் தொடரை தோற்றதோடு, டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக விலகிக் கொண்டார்.

- Advertisement -

இதற்குப் பிறகு ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆனால் இதற்கு நடுவில் பலர் தற்காலிகமாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். மேலும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு கேப்டனாக இருக்க, ஒரு வருடத்திற்கும் மேலாக ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவை ஏன் கேப்டனாக கொண்டு வந்தோம் என கங்குலி கூறுகையில் ” ரோகித் சர்மா உலக கோப்பையில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்திய விதத்தை பாருங்கள். இறுதிப்போட்டியில் தோல்வியடையும் வரை அந்த உலகக் கோப்பையில் இந்திய அணியே சிறந்த அணியாக இருந்தது. அதனால்தான் அவர் ஒரு சிறந்த கேப்டன். ஐபிஎல் தொடரிலும் அவர் ஐந்து கோப்பைகளை வென்று இருக்கிறார். எனக்கு இது ஆச்சரியமாக இல்லை.

இதையும் படிங்க : 106-7 to 290-9.. தமிழக அணியை மிரட்டிய சிஎஸ்கே சர்துல் தாகூர் அதிரடி சதம்.. ரஞ்சி செமி பைனலில் பின்னடைவு

நான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த பொழுதுதான் அவர் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அவர் அணியை வழிநடத்திய விதத்திலும் எனக்கு ஆச்சரியம் இல்லை. அவரிடமிருந்து திறமையைப் பார்த்துதான் அவரை கேப்டன் ஆக்கினேன். அவர் சிறப்பாக செய்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.