இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் அஸ்வின் மற்றும் ஜடேஜா பேட்டிங்கால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் முதல் நாள் முடிவடைந்ததும் இதுவரையில் பார்க்காத சில காட்சிகளை மைதானத்தில் பார்க்க முடிந்தது.
இன்று டாஸ் தோற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன் ஏமாற்றம் தர 144 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. பிறகு அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து 195 ரன்கள் எடுக்க இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருக்கிறது.
கம்பீர் பயிற்சி அணுகுமுறை
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கம்பீர் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருந்து வருகிறது. இந்திய அணி அடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், கேஎல்.ராகுல் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் களத்தில் இருக்கும் பொழுதே இன்னொரு இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் களம் இறக்கப்பட்டார். மேலும் இந்த ஜோடி சிறப்பான முறையில் விளையாடிய நெருக்கடியான நேரத்தில் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதேபோல் வித்தியாசமான அணுகுமுறை ஒன்று போட்டி முடிவடைந்ததும் மைதானத்தில் பார்க்க முடிந்தது.
தானே களம் இறங்கிய கம்பீர்
இன்று முதல் நாள் போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உடன் இணைந்து மைதானத்தில் ஓட்ட பயிற்சி செய்தார். இது பலருக்கும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் இந்த தொடர்ப்பு முன்பாக ஓய்வில் இருந்த பொழுதும் அபிஷேக் நாயர் உடன் இணைந்து ரோகித் சர்மா உடல் தகுதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதயம் படிங்க : இந்திய அணி பிரச்சனைல இருக்கிறப்போ.. கேஎல் ராகுல் இப்படி செஞ்சது ஏமாற்றமா இருக்கு.. ஜாகீர் கான் வேதனை
மேலும் இன்னொரு ஆச்சரியமாக ஓட்ட பயிற்சியில் கம்பீர் உடனடியாக களத்தில் இறங்கினார். அவருடன் இணைந்து கில்லும் ஓட்ட பயிற்சியை மைதானத்தில் ஆரம்பித்தார். பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கும் வீரர்களும் போட்டிக்கு பிறகு உடனே ஓய்வு எடுத்து ஹோட்டலுக்கு திரும்பாமல், மைதானத்தில் ஓட்ட பயிற்சி செய்வது பார்ப்பதற்கு வித்தியாசமானதாக இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறது. கம்பீர் பயிற்சியாளராக வந்ததால் இந்திய அணியில் இப்படியான மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.