இந்திய அணி பிரச்சனைல இருக்கிறப்போ.. கேஎல் ராகுல் இப்படி செஞ்சது ஏமாற்றமா இருக்கு.. ஜாகீர் கான் வேதனை

0
306
Zaheer khan and kl rahul

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறப்பாக விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் கேஎல் ராகுல் ஆட்டமிழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சுமார் 45 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கி விளையாடிய இந்திய அணி இந்திய அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 6 ரன்களிலும், துணை கேப்டன் சுப்மான் கில் 0 ரன்னிலும், மற்றொரு முன்னணி நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள்.

34 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தள்ளாட, தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுடன் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஓரளவு நன்றாக விளையாடி சரிவில் இருந்த இந்திய அணியை ஓரளவு மீட்டு எடுத்தனர். அதற்குப் பிறகு ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல் 52 பந்துகளை எதிர்கொண்டாலும் 16 ரன்களில் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கானை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்து ஜாகிர்கான் கூறும்போது “உங்கள் அணிக்குத் தேவைப்படும்போது, இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி அணி மீண்டு வர விரும்புவீர்கள். ஒரு பேட்ஸ்மேன் கிரீசில் நீண்ட நேரம் செலவழித்தால் அவரை செட் பேட்டர் என்று டெஸ்ட் போட்டிகளில் கூறுவதை பார்த்திருக்கிறோம். கே எல் ராகுலுக்கும் அதுபோலத்தான் இருந்தது. ஆனால் அவர் சிக்கலான காலகட்டத்தில் கிரீசில் இருக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒரு ஆப் ஸ்பின்னர் இடம் நேரான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறியது சற்று ஏமாற்றம் தான்” என்று கே எல் ராகுல் குறித்து ஜாகிர் கான் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கேஎல் ராகுல் வெளியேறினாலும் அதற்குப் பிறகு அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி இந்திய அணியை சிறப்பான நிலையில் முன்னேற உதவியது.

இதையும் படிங்க:56 ரன்கள் அடித்து.. ஜெய்ஸ்வால் 89 ஆண்டு டெஸ்ட் சாதனையை உடைத்தார்.. லெஜெண்டுகளின் வரிசையில் இடம்பெற்றார்

அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்களோடும் ஜடேஜா 86 ரன்களோடும் களத்தில் இருக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு என்பது ஓவர்களில் 339 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -