“உண்மை என்னனா.. எங்க எல்லாரையும் இப்ப டீம்ல இப்படித்தான் நடத்துறாங்க..!” – முகமது சிராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
3842
Siraj

தற்போது நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று போட்டிகளை பார்த்த அனைவருக்கும் தெரியும்.

இந்திய அணியின் செயல்பாட்டில் இரண்டு முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது. ஒன்று எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் இந்திய அணியின் பந்துவீச்சு பலம்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் சில நேரங்களில் மட்டுமே இப்படியான பந்துவீச்சு படை அமையும். ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு பந்துவீச்சாளர் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கி போட்டியை வென்று கொடுப்பார்கள். ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா இப்படியான பந்துவீச்சு படையை வைத்திருந்தது. தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது.

இந்திய அணியில் தற்பொழுது இருக்கும் இரண்டாவது வித்தியாசம்தான் மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. தற்பொழுது அணியின் வீரர்களை பார்த்தால் அவர்களுக்குள் மிகச்சிறந்த நட்பும் உறவும் இருக்கிறது. அவர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதோடு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறார்கள்.

இந்திய அணியின் வீரர்கள் தம் அணியின் மற்ற வீரர்களின் வெற்றியில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் அணிக்குள் ஒற்றுமை மிக பலமாக இருக்கிறது. இதன் காரணமாக களத்தில் ஒரே அணியாக இணைந்து செயல்படுகிறார்கள். இதை ஒவ்வொரு போட்டியிலும் பார்க்கலாம்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணையின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசும்பொழுது “இப்போது எங்கள் அணியின் உள் சூழலை நீங்கள் பார்த்தால், எல்லோருமே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுகிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் ஒற்றுமை மிக பலமாக இருக்கிறது. தற்போது இந்திய அணி ஒரு குடும்பம் போல் இருக்கிறது.

எங்கள் அனைவரின் இலக்கும் ஒன்றுதான் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் இந்தியாவுக்காக வெல்ல விரும்புகிறோம். அணி நிர்வாகம் எல்லோருடைய கருத்துகளையும் கேட்கிறது.

முக்கியமாக ஒவ்வொரு வீரருக்கும் அணி நிர்வாகம் முக்கியத்துவத்தை கொடுக்கிறது. இதே சூழலை நாங்கள் அப்படியே தொடர்ந்து கடைபிடித்து எடுத்துச் சென்றால், உலகக் கோப்பையை உயர்த்தும் எங்களுடைய கனவு நனவாகும்!” என்று கூறியிருக்கிறார்!