என்கிட்ட கொடுத்தா.. டபுளாவே திருப்பி தருவேன்.. வாங்க ரெடியா இருங்க.. கம்பீருக்கு விராட் கோலி கொடுத்த மாஸ் பஞ்ச்

0
920

தமிழ் சினிமாவில் நாம் எத்தனையோ ஹீரோக்கள் மாஸ் டயலாக்கை பேசி பார்த்திருப்போம். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அன்பு பாசமும் என்கிட்ட கொடுத்தால்,  திருப்பி டபுள் மடங்கு கிடைக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசி இருப்பார்.

ஆனால் இதே போன்று ஒரு வசனத்தை கிரிக்கெட் வீரர் எதிரணியிடம் பேசினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு மாஸ் சம்பவத்தை தான் இன்று விராட் கோலி செய்திருக்கிறார். விராட் கோலி களத்தில் எப்போதுமே பட்டாசாகத் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

- Advertisement -

நேற்று விராட் கோலியும் கௌதம் கம்பீரும் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் விராட் கோலி சும்மாக இந்த சண்டையை தொடங்கவில்லை. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆர் சி பி அணியை லக்னோ அணி வீழ்த்தியது. அப்போது ஆர் சி பி ரசிகர்களை வாயை மூடுங்கள் என்று கம்பீர் செய்கை செய்தார்.

மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் லக்னோ வீரர்கள் எல்லை மீறி நடந்து கொண்டார்கள். இதற்கு பதில் அளி கொடுக்கும் விதமாகத்தான் நேற்று விராட் கோலி களத்தில் கம்பீர் செய்த அதே செய்கையை திருப்பி செய்தார்
மேலும் நிக்கோலஸ் பூரான் வெற்றி பெற்றவுடன் செய்த கொண்டாட்டத்தை மீண்டும் நேற்று களத்தில் கேட்ச் பிடித்த விராட் கோலி லக்னோ அணி வீரர்களை பார்த்து செய்தார்.

இது குறித்து தற்போது பேசியுள்ள விராட் கோலி உங்களால் கொடுக்க முடியும் என்றால் அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் முதலில் கொடுக்காதீர்கள் என விராட் கோலி பேசியிருக்கிறார்.  மேலும் இந்த வெற்றி மிகவும் அழகானது இனிப்பானது என்று விராட் கோலி கூறினார்.

- Advertisement -

  இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது .சொந்த மண்ணை விட இங்கு எங்களுக்கு அதிக ரசிகர்கள் கூடியிருந்தனர். இதனால் ரசிகர்கள் எங்களை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது என்றும் விராட் கோலி கூறினார். இதை போன்று இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் இப்படித்தான் நாங்கள் தைரியமாக விளையாடுவோம் என்று கூறி இருக்கிறார்.