ஆஸி டெஸ்ட் சீரிஸ் முன்ன மாதிரி கிடையாது.. நாங்க அங்க ஜெயிச்சதும் இப்படி மாறிடுச்சு – விராட் கோலி பேட்டி

0
548
Virat

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முன்பு போல கிடையாது என விராட் கோலி கூறியிருக்கிறார்.

தற்போது உலக கிரிக்கெட்டில் முதல் இரண்டு இடங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் அசல் கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் தொடரில் மோதிக் கொள்ளும் பொழுது அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறுகிறது.

- Advertisement -

மாற்றப்பட்ட பழைய வரலாறு

இந்திய அணி பல ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வந்த போதிலும், பல கேப்டன்களின் கீழ் பயணம் செய்தும் ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை ஒரு டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியாமல் தொடர்ந்து வெறும் கையோடு இந்தியா திரும்பி வந்து கொண்டிருந்தது.

இப்படியான நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியை அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ரகானே தலைமையிலான இந்திய இளம் அணி ஆஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த அணியை மீண்டும் அவர்களது மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இப்பொழுது இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது.

- Advertisement -

எங்களுக்குள் முன்பு போல கிடையாது

இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “ஆரம்பத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களுக்கு மிகவும் தீவிரம் இருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து அவர்களது மண்ணில் வைத்து இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்ற பிறகு போட்டி மரியாதைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது”

இதையும் படிங்க : மகளிர் டி20 வேர்ல்ட் கப்.. கண்ணீர் விட்டு அழுத பங்களாதேஷ் கேப்டன்.. வரலாற்று வெற்றி.. ஸ்காட்லாந்து தோல்வி

“நாங்கள் டெஸ்ட் அணியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இரண்டு முறை அவர்களது மண்ணில் வைத்து வென்ற காரணத்தினால், இது மரியாதை மிக்க ஒன்றாக மதிப்பு மிக்க ஒன்றாக மாறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -