மகளிர் டி20 வேர்ல்ட் கப்.. கண்ணீர் விட்டு அழுத பங்களாதேஷ் கேப்டன்.. வரலாற்று வெற்றி.. ஸ்காட்லாந்து தோல்வி

0
523
Bangladesh

தற்போது சார்ஜாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி இருக்கிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பங்களாதேஷ் கேப்டன் கண்ணீர் விட்டு அழுதார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி பி பிரிவில் இடம் பெற்று இருக்கும் பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

தட்டுத்தடுமாறிய பங்களாதேஷ் அணி

முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஷாதி ராணி 32 பந்தில் 29 ரன்கள், முர்ஷிதா 14 பந்தில் பன்னிரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த ஷோபனா முஸ்தரி 38 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் நிகர் சுல்தானா 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பங்களாதேஷனி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியால் ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் எடுக்க முடியவில்லை. ஸ்காட்லாந்து அணியின் தரப்பில் சஸ்கியா ஹார்லி இரண்டு ஓவர்களுக்கு 13 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஸ்காட்லாந்துக்கு போராடிய சாரா

ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீராங்கனையாக வந்த சாரா பிரைஸ் இறுதிவரை களத்தில் நின்று 52 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.அவருக்கு அடுத்தபடியாக இரண்டு ஸ்காட்லாந்து வீராங்கனைகள் அதிகபட்சமாக 11 ரன்கள் எடுத்தார்கள். மற்ற எந்த வீராங்கனைகளிடம் இருந்தும் நல்ல பங்களிப்பு வரவில்லை.

இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய போதிலும் கூட, ஏழு விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : இது குப்பை மாதிரியான பேச்சு.. தோனி பற்றி ஹர்பஜன் சிங் கருத்துக்கு.. சிஎஸ்கே பிசியோ பதிலடி

பங்களாதேஷ் அணி இதுவரையில் மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 16 போட்டிகளில் ஒரு வெற்றி கூட இல்லாமல் தோல்வியடைந்து வந்திருக்கிறது. அவர்களுக்கு டி20 உலக கோப்பையில் முதல் வெற்றியாக இது பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானா வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -