பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வந்து அசத்தலாக பந்துவீசி இருக்கிறார்.இந்திய அணிக்கு தன்னுடைய மறு வருகை எப்படியான உணர்வாக இருக்கிறது? என கூறியிருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றார். அந்தத் தொடரில் இந்திய அணி முதல் சுற்று உடன் தோற்று வெளியேறி வர இவருடைய வாய்ப்பு அத்துடன் முடிந்து போனது. தற்பொழுது மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்.
கம் பேக்கில் தவறிய கேட்ச் வாய்ப்பு
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எளிய கேட்ச் வாய்ப்பை நிதிஷ்குமார் ரெட்டி தவறவிட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு சர்வதேச விக்கெட்டைப்பற்றும் வாய்ப்பு கைநழுவி போனது. மேலும் முதல் ஓவரில் 15 ரன்கள் சென்றது. இறுதியில் வரும் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 31 ரன்கள் மட்டுமே 4 ஓவர்களுக்கு தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இது குறித்து வரும் சக்கரவர்த்தி பேசும்பொழுது “மூன்று வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்புவது உணர்ச்சிகரமாக இருக்கிறது. இது மறுபிறப்பு போல உணர்கிறேன். நான் என்னுடைய செயல் முறையில் செயல்பட விரும்புகிறேன். மேலும் ஐபிஎல் தொடரிலும் இதையே செய்து வருகிறேன். நான் எப்பொழுதும் நிகழ்காலத்தில் இருக்க நினைக்கிறேன். அதனால்தான் அதிகம் சிந்திக்கவும் அல்லது எதையும் வெளிப்படுத்துவோ செய்வது கிடையாது”
அஸ்வின் அண்ணாவுடன் இருந்தது உதவியது
மேலும் பேசிய அவர் ” எனக்கு ஐபிஎல் தொடருக்கு பிறகு தரமான டிஎன்பிஎல் தொடர் இருந்தது. அதில் நான் அஸ்வின் அண்ணாவுடன் இணைந்து விளையாடினேன். நாங்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றோம். அது என் நம்பிக்கையையும் அதிகரித்தது. இங்கு வருவதற்கு நான் தயாராவதற்கு அது எனக்கு பெரிய உதவியாக அமைந்திருந்தது”
இதையும் படிங்க : மயங்க் யாதவ் வேகத்துக்கு முன்னால என் பந்தெல்லாம் சும்மா.. இந்த அட்ஜஸ்ட்மெண்ட் செய்தேன் – அர்ஸ்தீப் சிங் பேச்சு
“முதல் கேட்ச் வாய்ப்பை பிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதுதான் கிரிக்கெட் இப்படி எல்லாமே நடக்கும். நீங்கள் இந்திய அணியில் இல்லாதவுடன் உங்களை மக்கள் மறந்து விடுவார்கள். எனவே நீங்கள் உங்களை தகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கதவை மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் இதை தொடர்வேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.