இன்று ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூரியவன்சியின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விட எளிதாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற வைபவ் சூரியவன்சி போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்ல வேண்டிய மூன்று போட்டிகளை கடைசியில் சரியான முறையில் பேட்டிங் செய்யாமல் தோற்று இருந்தது. இதன் காரணமாக ஏறக்குறைய ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பில் இருந்தும் வெளியேறிவிட்டது. இந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகளை வென்று நல்ல முறையில் ஐபிஎல் தொடரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சூரியவன்சியின் சூறாவளி பேட்டி
இன்று டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழக்கம்போல் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள்.
ஒரு முனையில் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியவ்ன்சி 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர், இளம் வயதில் டி20 சதம் அடித்த வீரர், மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்து 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவுலர்களை பார்த்து பயமில்லை
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வைபவ் சூரியவன்சி பேசும் பொழுது “இந்த போட்டியில் சதம் அடித்ததை நான் நன்றாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்த சதம் வந்திருக்கிறது. நான் கடந்த மூன்று நான்கு மாதங்களாக செய்யும் பயிற்சிக்கு ரிசல்ட் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நான் விளையாடும் பொழுது மைதானத்தை அதிகம் பார்க்கவில்லை. பந்தை பார்த்து விளையாடுவதில்தான் கவனம் செலுத்தினேன்”
இதையும் படிங்க : நான் தம்பி சூரியவன்சிகிட்ட இதத்தான் சொன்னேன்.. எங்களுக்கு ஒரு கடமை இருந்தது – ஜெய்ஸ்வால் பேட்டி
“ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடுவது எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. ஏனென்றால் எப்பொழுதும் பாசிட்டிவாக இருக்கக் கூடியவர் மேலும் அவர் எனக்கு எப்பொழுதும் அறிவுரையை கொடுக்கக் கூடியவர். எனவே அவருடன் பேட்டிங் செய்வது எனக்கு எளிதானது. ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பது எனக்கு கனவு போன்றது. என்னை பவுலர்கள் குறி வைப்பார்கள் என்றெல்லாம் பயம் கிடையாது. நான் அதைப்பற்றி எல்லாம் யோசிப்பதும் இல்லை. நான் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.