நான் தம்பி சூரியவன்சிகிட்ட இதத்தான் சொன்னேன்.. எங்களுக்கு ஒரு கடமை இருந்தது – ஜெய்ஸ்வால் பேட்டி

0
557
Jaiswal

இன்று ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூரியவன்சி அதிரடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி பேட்டிங் குறித்து அவருடன் இணைந்து விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் உடன் 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளில் 7 போட்டிகளை தோற்று, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் 9வது இடத்தில் இருந்தது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய சூரியவன்சி

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 50 பந்துகளில் 84 ரன்கள், ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 அவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. மதிஷா தீக்சனா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 35 பந்தில் அதிவேக சதம் அடித்து வைபவ் சூரியவன்சி அசத்தினார். அவர் 38 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் 40 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 15.5 ஓவரில் இலக்கை எட்டி 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சூரியவன்சியிடம் இதைச் சொன்னேன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. மேலும் சூரியவன்சி எங்களுக்காக இதை அதிக காலம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். நான் அவரிடம் தொடர்ந்து விளையாடுங்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் இன்று நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தார். மேலும் சிறந்த ஷாட்டுகளை மட்டுமே அடித்தார். அவர் வலைகளில் கடினமாக உழைக்கிறார். அவருக்கு திறமையும் நல்ல மனோபாவமும் இருக்கிறது”

இதையும் படிங்க : 15.5 ஓவரில் 212 ரன்.. குஜராத் அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கி 14 வயது சிறுவன் சாதனை சதம்.. 8 விக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

” கடந்த சில போட்டிகளில் நாங்கள் ஆட்டத்தை முடிக்கவில்லை. எனவே நாங்கள் இறுதிவரை தங்கி இருந்து ஆட்டத்தை முடிக்க விரும்பினோம். நான் அவரிடம் இது பற்றி கூறியிருந்தேன். மேலும் எங்களில் யார் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்களோ அவர் தொடர்ந்து சென்று ஆட்டத்தை முடிக்கும் வரை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இன்று என்னால் முடிந்த வரை விளையாடி நான் ஆட்டத்தை முடித்து வைத்தேன். எங்களுடைய பயிற்சியாளர் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். நாங்கள் இதே வழியில் தொடர்ந்து செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -