இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மூன்றாவது நாளிலும் நடுவர்கள் கடுமையான முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
இந்த டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகள் கொண்டதாக நடத்தப்படுகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2015 ஆம் ஆண்டு சம்பவம்
இந்தியாவில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாள் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில்தான் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு முழு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமையும் விடுமுறை நாள் என்கின்ற காரணத்தினால் திரளாக வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பினார்கள்.
அரிய பரிதாப நிகழ்வு
இன்று மூன்றாவது நாள் எப்படியும் போட்டி 50 ஓவர்களாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் இன்று மழையும் பெய்யவில்லை. மேலும் மைதானத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த தார்பாய்கள் விலக்கப்பட்டிருந்தது. ஸ்டெம்ப் நடப்பட்டிருந்தது. இதெல்லாம் போட்டியை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் ஆகும். எனவே ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தார்கள்.
இதைத்தொடர்ந்து நடுவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டார்கள். காலையில் தொடங்கி படிப்படியாக கள ஆய்வு தற்பொழுது முடிவுக்கு வந்தது. இதன்படி கள ஆய்வு மதியம் மூன்று மணிக்கு செய்ய வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. மைதானத்தில் அங்கங்கு மழையின் ஈரப்பதம் இருந்தது.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டி20 சீரிஸ்.. வாய்ப்பு கிடைக்காத 7 திறமையான இந்திய வீரர்கள் – முழு பட்டியல் உள்ளே
மேற்கொண்டு மதியம் மூன்று மணிக்கு கள ஆய்வு செய்து அதற்குப் பிறகு போட்டியை துவங்குவது என்பது முடியாத காரியம் என்பதால் இன்று மூன்றாவது நாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் நடுவர்களால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்ட அரிய சம்பவம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடந்து விடுமுறை நாள் ரசிகர்களை பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.