நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என சூசகமாக இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருக்கிறார். மேலும் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்திய ஆடுகளங்களைப் பற்றி பேசக்கூடாது
இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்படும் ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாகவும், அதனால் போட்டிகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் முடிந்து விடுவதாகவும் தொடர்ந்து வெளியில் இருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட கொண்டு வருகின்றன.
இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “இந்தியா தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவடையும் அளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்து யாரும் பேசவில்லை. இந்தியாவில் இரண்டு நாட்களில் முடியும்படி ஆடுகளங்கள் அமைக்கப்படுவதில்லை. இது தவறான ஒரு பேச்சாகும். எனவே இந்திய ஆடுகளங்கள் பற்றி பேசக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு வீரர்கள் காத்திருக்க வேண்டும் :
மேலும் பேசிய கம்பீர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் எவ்வளவு சிறந்தவர் அவர் எப்படி தாக்கம் செலுத்தினார் என்று நாம் எல்லோரும் பார்த்து இருக்கிறோம். அவர் செய்துள்ளதை அவர் வயதில் பலர் செய்தது கிடையாது.அவரது பேட்டிங் அவரது விக்கெட் கீப்பிங்கை மறைத்து விடுகிறது. அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர்”
இதையும் படிங்க : 4 வருஷமா பாக்கறேன்.. இது நடந்தா மட்டுமே.. ரோகித் கம்பீர் உறவு நல்லா இருக்குனு அர்த்தம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
“நாங்கள் எந்த வீரரையும் கைவிட மாட்டோம் போட்டிக்குத் தேவையான வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை உருவாக்குவோம். ஜுரல் ஒரு அற்புதமான வீரர். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் போன்ற வீரர் வரும்பொழுது அவர் காத்திருக்க வேண்டும். இதேதான் சர்ப்ராஸ் கானுக்கும். அவரும் தன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.