“விடாம எடுத்துட்டு போங்க இந்த மூணு பேர.. உலக கோப்பை உங்களுக்குதான்!” – இர்பான் பாதான் மகிரேட் ஐடியா!

0
3657
ICT

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு, இன்று முதல் பயிற்சி போட்டிகள் ஆரம்பித்து அக்டோபர் மூன்றாம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி உலகக் கோப்பை துவங்குகிறது!

இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது அங்கு முகாமிட்டு இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணியை தற்போது எடுத்துக் கொண்டால் எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஃபீல்டிங் மட்டுமே கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

இதைத் தாண்டி இன்னொரு சிக்கலான விஷயமாக, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார்கள் என்பதுதான். இதன் காரணமாக விளையாடும் அணியில் எந்த 11 பேரை தேர்வு செய்வது என்கின்ற பெரிய குழப்பம் இருந்து வருகிறது.

இது தொடர்பாக அணி நிர்வாகத்திற்கு என்ன யோசனை இருக்கிறது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் எடுத்துக்கொண்டு, கூடுதலாக சூரியகுமார் இல்லை ஸ்ரேயாஸ் இருவரில் ஒருவரை அணியில் சேர்க்கும் திட்டம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இர்ஃபான் பாதான் “நான் ஏழு பேட்ஸ்மேன்கள் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் இந்திய அணி சரியான ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆறாவது பந்துவீச்சாளராக ஹர்திக் இருக்கிறார். ஆனால் நீங்கள் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் உடன் செல்ல வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ஆடுகளங்களில் பனிப்பொழிவுகள் பின்பு வரக்கூடும். எனவே உலகக்கோப்பை தொடர் முழுவதும் நீங்கள் திடமான பந்துவீச்சு வரிசையை வைத்திருக்க வேண்டும்.

சமி, சிராஜ் மற்றும் பும்ரா என மூன்று சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் எப்பொழுதும் செல்லுங்கள். மேலும் குல்தீப் யாதவுடன் யார் இணைய வேண்டும் என்பதை பொறுத்து ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் சரியான பந்துவீச்சாளர்களுடன் செல்வது அவசியம். உங்களுக்கு மேலே இருக்கும் 7 பேட்ஸ்மேன்கள் அதற்கான பொறுப்பை பார்த்துக் கொள்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!