ரோகித் டீம் பங்களாதேஷ சாதாரணமா எடுத்துக்காதிங்க.. அவங்கக்கிட்ட இந்த 2 விஷயம் இருக்கு – சுரேஷ் ரெய்னா அட்வைஸ்

0
119
Raina

இந்திய அணி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடரை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. இந்த தொடரை முழுவதுமாக வெல்லும் பொழுது, அது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அழுத்தத்தை கொஞ்சம் குறைக்கும்.

- Advertisement -

பாகிஸ்தானில் பங்களாதேஷ் அணி

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இது இந்தியா அனைத்துமே ஒரு எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.

மேலும் இந்திய அணி 40 நாட்களுக்கும் மேலான ஓய்வில் இருந்து இந்த தொடரை வந்து சந்திக்கப் போகிறது. மேலும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஜனவரி மாதத்தில் விளையாடியது. மேலும் விராட் கோலி அந்த தொடரில் விளையாடவில்லை. எனவே இந்திய வீரர்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எச்சரிக்கையாக அணுக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா எச்சரிக்கை

இதுகுறித்து எச்சரிக்கை தெரிவித்திருக்கும் சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது ” இப்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அமைக்கப்படும். சிறந்த இந்திய வீரர்கள் துலீப் டிராபியில் விளையாடுவது பிசிசிஐயின் சிறந்த முயற்சியாகும். நீங்கள் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடும் பொழுது நிறைய கற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஜடேஜாவின் இடம் எனக்குத்தான்.. அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தருக்கு இல்லை – ரிஷப் பண்ட் அணி வீரர் நம்பிக்கை

பங்களாதேஷ் அணியிடம் சிறந்த சுழல் பந்து வீச்சுதாக்குதல் இருக்கிறது. மேலும் அந்த அணிக்கு நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி வரும் சில வீரர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக பங்களாதேஷ் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.மேலும் இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு நல்ல பயிற்சியாக இந்திய அணிக்கு அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -