இந்திய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருக்கிறார். சீக்கிரத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்திலும் ஓய்வு பெறுவார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு ரிஷப் பண்ட் உடன் இணைந்து விளையாடும் டெல்லி வீரர் ஒருவர் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை தான் நிரப்ப முடியும் என்று கூறியிருக்கிறார்.
தற்போது முதல்முறையாக டெல்லி பிரிமியர் டி20 லீக் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் நிறைய இளம் டெல்லி திறமைகள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர்களுடைய தாக்கமும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா
இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் சில பல ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா நிரந்தர வீரராக இடம்பெற்று வருகிறார். மேலும் அக்சர் படேல் சிறப்பாக இருந்தும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு கடைசி வரையில் அணியில் விளையாட வைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் இவருடைய இடத்தை நிரப்புவதற்கு இவரைப் போன்ற பவுலிங் ஆல் ரவுண்டரான இடது கை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் இருக்கிறார். மேலும் இடதுகை பேட்டிங் வலது கை சுழல் பந்துவீச்சாளர் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். இத்தோடு வலதுகை பேட்டிங் மற்றும் வலதுகை சுழல் பந்துவீச்சு என இளம் பேட்டிங் ஆல் ரவுண்டர் ரியான் பராக் இருக்கிறார். இவர்களைத் தாண்டி யாராவது வாய்ப்பு பெறுவார்கள் என்றால் இடதுகை சுழல் பந்துவீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா பெற முடியும்.
ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்ப முடியும்
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ரிஷப் பண்ணிட்டு உடன் இணைந்து விளையாடி வரும் டெல்லி வீரர் லலித் யாதவ் ரவீந்திர ஜடேஜா இடத்தை இந்திய வெள்ளை பந்து அணிகளில் நிரப்ப முடியும் என்று கூறியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிடல்ஸ் சனிக்காக விளையாடி வரும் இவர் 27 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மற்றும் 305 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து லலித் யாதவ் கூறும் பொழுது “நிச்சயமாக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் இடத்திற்கான போட்டியில் என்னை நான் பார்க்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதும் அதன் ஜெர்சியை அணிவதும் என் மனதில் தினந்தோறும் நிழலாடும் ஒரு விஷயம். அதுவே எனக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கிறது.
இதையும் படிங்க : கோலியின் 1000 ஐபிஎல் ரன்.. ஆர்சிபியின் கோப்பை வாய்ப்பை பறித்த இந்திய வீரர் ஓய்வு.. 31 வயதில் ரிடையர்ட் அறிவிப்பு
தற்போது டெல்லி பிரிமியர் லீக்கில் என்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நான் திருப்தி அடையவில்லை. அடுத்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவதற்கு நான் பசியோடு காத்திருக்கிறேன். இப்பொழுது செயல்பட்டு உள்ளதை ஒரு சராசரி செயல் திறனாகவே நான் எண்ணுவேன்” என்று கூறியிருக்கிறார்.