மச்சான் கே எல் ராகுல்..! உன்ன நினைச்சி அழுகிறதா, சிரிக்கிறதானே தெரியல.. ஸ்ரீகாந்த் கிண்டல்

0
811

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடக்க வீரராக களம் இறங்கியுள்ள கே எல் ராகுல் தற்போது மத்தளம் போல் இரு பக்கமும் அடி வாங்கி வருகிறார். கே எல் ராகுலை பல முன்னால் வீரர்கள் கடலையை வறுப்பது போல் வறுத்து எடுக்கிறார்கள். இதற்குக் காரணம் கடந்த 10 இன்னிங்ஸ்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கே எல் ராகுல் அடித்த அதிகபட்ச ஸ்கோரே 23 ரன்கள் தான். இதனால் கேஎல் ராகுலுக்கு எப்படி அணியின் இடம் கிடைக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கே எல் ராகுலை கடுமையாக கிண்டல் அடித்துள்ளார். இது குறித்து தனது youtube சேனலில்  பேசிய அவர் கே எல் ராகுலை மச்சான் என்று அழைத்துள்ளார். கே எல் ராகுல் மச்சான் உனக்கு என்ன ஆச்சு. நான் உன்னை எப்போதுமே rolls-royce ராகுல் என்றுதான் அழைப்பேன். ஆனால் இப்போது அம்பாசிடர் கார் போல் ஆகி தற்போது த்ரீ வீலர் வாகனம் போல் மாறிவிட்டாயே. உனக்கு என்னதான் ஆச்சு..? என்னை கேட்டால் ராகுல் கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு வாரம் பேட்டிலேயெர் கையை வைக்கக்கூடாது. எங்கேயாவது கோவில் குளத்திற்கு சென்று வர வேண்டும். ராகுலுக்கு தற்போது கடினம் காலம் தொடங்கி விட்டது. இந்த தருணத்தில் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் ரன் சேர்க்க முடியாது. கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு ராகுல் சென்று வழிபாடு நடத்த வேண்டும். சில வாரத்திற்கு எங்கேயாவது சென்று வா. மனதளவில் உனக்கு ஏதோ பிரச்சனைகள் இருக்கிறது. அதனை சரி செய்து விட்டு மீண்டும் வா.

ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சி செய்து பேட்டிங் யுத்திகள் கவனம் செலுத்தி, மீண்டும் விளையாடு. இல்லை என்றால் நீ இப்படி தான் தொடர்ந்து ஆட்டம் இழந்து கொண்டே இருப்பாய். இது உனக்கு மட்டும் அல்ல பல முன்னாள் வீரர்களுக்கும் நடந்திருக்கிறது. எப்போதெல்லாம் போதாத காலம் வருகிறதோ அப்போதெல்லாம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும். உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ராகுலின் பேட்டிங் மீது எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது. ஆனால் என்னை கேட்டால் தற்போது சுப்மன் கில்லுக்கு  தான் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்க வேண்டும். சுப்மன் கில் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணி அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து ராகுலுக்கு கொஞ்சம் பிரேக் கொடுங்கள் என்று ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

- Advertisement -