உறுதியா சொல்றேன்.. ரோகித் சர்மாவுடன் மினி உலக கோப்பையில் ஓபனிங் பண்ண போறது இவர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

0
958

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி மிகத் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவோடு களமிறங்கப் போகும் மற்றொரு பேட்ஸ்மேன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கு பெற்றது. இலங்கையில் விளையாடிய அந்த ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு சென்றாலும், அதற்கு பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

இதில் ரோகித் சர்மாவோடு களம் இறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் மூன்று போட்டிகளில் விளையாடி 19.00 ரன்கள் சராசரியிலும், 61.29 பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத் தவிர மற்ற முன்னணி வீரர்களும் சொதப்பி வருகின்றனர். எனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதால் அடுத்த ஒரு நாள் போட்டி தொடர் இந்தியாவுக்கு மிக முக்கியமாக உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவோடு கில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துவக்க வீரராக களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஒருவேளை கில் சிறப்பாக செயல்படுத் தவறும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் அவருக்கு பேக்-அப் பிளேயராக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்த தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறந்த கூட்டணி. ஜெய்ஸ்வாலுக்கு பேக்-அப் வீரராக இருப்பதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஒருவேளை கில் எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விரைவில் அவரது வாய்ப்பை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணியும் சிறந்த மிடில் ஆர்டரைக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:இந்திய அணியை பற்றி அந்த ஒரு விஷயத்தை ஏத்துக்குறேன்.. உலகத்தில் 2 பெஸ்ட் டீம் இதுதான் – ஸ்மித் பேட்டி

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்தியா மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளார்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கு ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -