எங்க பாகிஸ்தான் டீம்க்கு.. இந்த இந்திய வீரர் தேவை.. வேற வழியே இல்ல – டேனிஷ் கனேரியா விமர்சனம்

0
212
Gambhir

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்பொழுது ஏகத்திற்கும் குழப்பம் காணப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை சீர்படுத்த இந்திய முன்னாள் வீரர் ஒருவரை போன்ற வீரர் வேண்டும் என டேனிஷ் கனேரியா குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் அணி நேற்று வந்த அமெரிக்க அணி இடம் தோற்க ஆரம்பித்து, உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வியடைவது வரை தோல்வியை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு என்ன செய்தாலும் அது பலன் கொடுப்பதாக அமையவில்லை.

- Advertisement -

பயிற்சியாளர்கள் மாற்றம்

இப்படியான நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளுக்கு கேரி கிரிஸ்டன் மற்றும் சிவப்புப்பந்து அணிக்கு ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரை புதிய பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இருந்தபோதிலும் கூட டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்ததோடு முதல் சுற்றில் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதைத்தொடர்ந்து உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. அந்த அணியால் எந்த கிரிக்கெட் வடிவத்திலும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை.

- Advertisement -

மிகக்குறிப்பாக பாகிஸ்தான் அணியில் வீரர்களிடையே ஒற்றுமை மற்றும் உடல் தகுதி இல்லை என பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்பது போல களத்தில் வீரர்களுடைய செயல்பாடு தெரிகிறது. இப்போது அந்த அணியை முன் நின்று வழிநடத்த ஒரு மூத்த நபர் தேவையாக இருக்கிறார்.

கம்பீர் மாதிரி ஒருவர் வேண்டும்

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது “எல்லாம் ஒரு பொருட்டுகாகவே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் செய்யப்படுகிறது. அதுதான் புதிய கேப்டனை உருவாக்குகிறேன் என்றும், கேப்டனை மாற்றுகிறேன் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. இது எப்பொழுதும் நல்ல பலனை தராது. நீங்கள் உங்களுடைய நிரந்தர கேப்டனுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு கேப்டனை உருவாக்கி அவரை ஒரு வருடம் சுதந்திரமாக விட்டு கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படியான எந்த கடினமான முடிவையும் எடுக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு வருடத்திற்கு பிறகு கேள்வியும் கேட்பதில்லை, சிறப்பான செயல்பாடு இல்லை என்றால் சரியான முடிவையும் எடுப்பதில்லை.

இதையும் படிங்க : 233 ரன்.. அதிரடியை கையில் எடுத்த ருதுராஜ் டீம்.. ஸ்ரேயாஸ் அணியை வீழ்த்தியது.. துலீப் ட்ராபி 2024

இந்திய அணியை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்றிய ராகுல் டிராவிட் இருந்தார். அடுத்த தற்பொழுது கம்பீர் இருக்கிறார். அவர் அற்புதமான வீரர். அவர் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதே கிடையாது. தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இப்படி கடினமான முடிவுகளை எடுக்கக்கூடிய உறுதியான நபர் தேவை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -