233 ரன்.. அதிரடியை கையில் எடுத்த ருதுராஜ் டீம்.. ஸ்ரேயாஸ் அணியை வீழ்த்தியது.. துலீப் ட்ராபி 2024

0
574
Ruturaj

ஆந்திர மாநிலம் ஆனந்த்பூர் மைதானத்தில் துலீப் டிராபி தொடரில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சமீபத்தில் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் வாய்ப்பு கொடுக்கப்படாத ருதுராஜுக்கு இந்தத் தொடரில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் சொதப்பல்கள்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்தியா டி அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அக்சர் படேல் 118 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்தார். இந்தியா சி அணி தரப்பில் வைசாக் விஜயகுமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா சி அணி 168 ரன்கள் எடுத்துசுருண்டது. அந்த அன்னிக்கு தமிழக வீரர் பாபா இந்திரஜித் 149 பந்துகளில் தாக்குப்பிடித்து விளையாடி 72 ரன்கள் எடுத்து அணியையும் முன்னிலை பெற வைத்தார். இந்தியா டி அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் – தேவ்தத் படிக்கல்

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா டி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 70 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இந்தியா டி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் மானவ் அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து 233 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 46 ரன்கள், தமிழகத்தின் சாய் சுதர்சன் 34 பந்தில் 22 ரன்கள், ரஜத் பட்டிதார் 77 பந்தில் 44 ரன்கள், ஆரியன் 77 பந்தில் 44 ரன்கள், பாபா இந்திரஜித் 28 பந்தில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : மொத்த இந்தியால எனக்கு ஃபேவரைட் கிரவுண்ட் சென்னைதான்.. அதுக்கு காரணம் இருக்கு – ஷம்சி பேட்டி

இந்தியா சி அணி 191 ரன்னுக்கு ஆறு விக்கெட்டை இழந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இளம் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் இறுதி வரை களத்தில் நின்று 63 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -