கோலிக்காக சில்லறையை சிதறவிட்ட சச்சின்! அந்த சதத்தில் மிக முக்கியமானது இது தான் என கருத்து

0
658

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி என்ற சூறாவளி கடந்த சில நாட்களாக தென்றல் போடி இருந்து, சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிரணிக்கும் எந்த தாக்கத்தையும் கோலி கொடுக்கவில்லை.  ஆனால், சன்ரைசர்ஸ்க்கு  எதிரான லீக்  ஆட்டத்தில் கோலி சுழன்று, சுழன்று அடித்தார்.

- Advertisement -

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டிரிட்டாக இருந்தது. இதன் மூலம் முக்கிய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வென்றது. அதுமட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் 4வது இடத்தையும் ஆர்சிபி பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலியே, தாம் கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்றும் பயிற்சி களத்தில் பந்துகளை நான் நன்றாக அடித்த போதும் போட்டியின் போது அவ்வாறு நான் செயல்படவில்லை என்றும் கூறினார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர் கொள்ள வேண்டும் என்று மனநிலையில் இருந்ததாக விராட் கோலி கூறினார்.விராட் கோலியின் இந்த ஆட்டத்தை பார்த்து சச்சினே சில்லறைகளை சிதற விட்டிருக்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது முதல் பந்தில் கவர் டிரைவ் ஆடியதை பார்த்தவுடனே இன்றைய நாள் விராட் கோலி உடையது என்று எனக்கு தெரிந்து விட்டதாக கூறினார்.

- Advertisement -

விராட்டும் , டுபிளசிஸ்சும் இன்றைய ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்று குறிப்பிட்ட சச்சின், இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமே கோலியும், டுபிளசிஸூம் பெரிய ஷாட் மட்டும் ஆடாமல்இருவரும் ரன்களை அபாரமாக ஓடி எடுத்து இருக்கிறார்கள் என்று பாராட்டினார்.

இதன் மூலம் கோலியும்,டுபிளசிஸூம் வெற்றிகரமான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கிறார்கள் என்று சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டினார்.விராட் கோலி, டுப்ளசிசஸ் விளையாடியதை   பார்க்கும்போது 186 ரன்கள் என்ற இலக்கு போதுமானதாக  இருக்காது என்றும் சச்சின் கூறியுள்ளார்.