இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்காக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தன்னை நிரூபித்த பிறகும் கூட, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அவருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. ரவி சாஸ்திரி அவரை மீண்டும் கூட்டி வந்ததோடு துவக்க வீரராக களம் இறக்கி சாதித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா
மகேந்திர சிங் தோனி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசியாக சர்வதேச போட்டியை சச்சின் டெண்டுல்கர் விளையாடிய பொழுது ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி இரண்டு சதங்கள் எடுத்திருந்தார். எனவே அவர் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் தோனி அவரை டெஸ்ட் அணியில் இருந்து கழட்டிவிட்டார். மேலும் விராட் கோலியின் ஆரம்ப காலகட்டத்தில் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவை விரும்பவில்லை. பிறகு ரவி சாஸ்திரி ரோகித் சர்மா போன்ற ஒருவரால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதே துவக்க இடத்தில் சாதிக்க முடியும் என்று கூறி வந்தார். வாய்ப்பு கொடுத்து அதை நிறைவேற்றவும் செய்தார்.
நன்றி உள்ளவனாக இருக்கிறேன்
இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது ” டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு ஒரு வருவாய்ப்பை கொடுப்பது சாதாரண முடிவாக இருக்க முடியாது என்கின்ற காரணத்தினால், எனக்கு வாய்ப்பு கொடுத்த ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவருக்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார்கள்”
இதையும் படிங்க : கம்பீர் ரோகித்.. சொந்த பேட்ஸ்மேன்களுக்கு இந்த பிரச்சனையை கொடுக்கறாங்க.. என்ன நடக்குது? – தினேஷ் கார்த்திக் பேட்டி
” டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு பேட்டிங் ஆர்டரில் எந்த இடம் கிடைத்தாலும் பரவாயில்லை அதை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு துவக்க வீரராக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் நான் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் நான் என்னுடைய முறையில் சுதந்திரமாக சென்று விளையாட போகிறேன் என்று கூறினேன். தற்போது வரை நான் அதே சுதந்திரமான முறையில் விளையாடி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.