பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடந்து முடிந்த டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி 144 ரன்களுக்கு முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து அதிரடியாக 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநாயகன் அஸ்வின்
இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாளில் மூன்று விக்கெட் நான்காவது நாளில் மூன்று விக்கெட் என மொத்தம் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி பந்துவீச்சிலும் அசத்தினார். இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டி குறித்து பேசும் பொழுது “நான் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் போன்ற எண்ணிக்கையை கணக்கிடுவது கிடையாது. சென்னையில் விளையாடு ஒவ்வொரு முறையும் எனக்கு அற்புதமான உணர்வு கிடைத்திருக்கிறது. நான் நிறைய சர்வதேச போட்டியை இந்த மைதானத்தில் அமர்ந்து பார்த்து இருக்கிறேன். இன்று இந்திய அணிக்கு வந்து விளையாடி சாதிப்பது மகிழ்ச்சி”
அவருக்கு என்னுடைய நன்றி
“நான் என்ன செய்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த போட்டியில் போராடுவதற்கும் பேட்டிங்கில் ஆழமாக சென்று விளையாடுவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக நான் முதலில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”
இதையும் படிங்க : நாங்க நினைச்சதை செஞ்சு முடிச்சோம்.. அந்த பையன் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான் – ரோகித் சர்மா பேட்டி
“இது என்னுடைய சிறப்பான இன்னிங்ஸாக அமைந்தது. நான் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் தந்து பந்து வீச்சில் வெளிப்படக்கூடிய நபராக இருக்கிறேன். பந்துவீச்சு என்னுடைய முதன்மையான விஷயம். எனக்கு பேட்டிங் என்பது இயல்பாக வரக்கூடிய ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக நான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் பிரித்து வேலை செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.