பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றிக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.
இந்திய அணி வெற்றி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில்பங்களாதேஷ் அணி டாஸ் வெல்ல இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 376 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ அணி தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்ய 515 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணி 234 ரன்கள் மட்டுமே எடுக்க 280 வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
பொறுமையாக இருக்க வேண்டியது முக்கியம்
இந்த போட்டியில் வெற்றி குறித்து பேசி இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “எங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பது சிறந்த முடிவாக இருந்தது. நாங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் கிரிக்கெட்டில் இருந்து நாங்கள் வெளியேறிவிடவில்லை.நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு வந்தோம். நாங்கள் விரும்புகின்ற முடிவை பெற விரும்பினோம்.
ரிஷப் பண்ட் சில கடினமான காலங்களை சந்தித்திருக்கிறார். அவர் தன்னை நிர்வகித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. அவர் ஐபிஎல் கோப்பைக்கு வந்தார். பின்பு அவருக்கு ஒரு வெற்றிகரமான உலகக் கோப்பை இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் அவர் விரும்பும் ஒரு வடிவம் ஆகும். இது அவருக்கு நல்ல விளையாட்டு நேரத்தை கொடுத்தது. அவருக்கு நாம் கிரெடிட் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க : வெறும் 11.1 ஓவர்.. அஸ்வினின் அரைமணி நேர மேஜிக்.. பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
கண்டிஷன் எதுவாக இருந்தாலும் அதற்கான அணியை உருவாக்க விரும்பினோம். எங்கு விளையாடினாலும் நாங்கள் இதை செய்து வந்திருக்கிறோம். எங்கள்வீரர்கள் எப்பொழுதும் செயல்பட தயாராக இருக்கிறார்கள். இதற்கான பெருமை அவர்களுக்கு சேரும். சிவப்பு மண் ஆடுகளம் எப்பொழுதும் எதையாவது கொடுக்கும். இங்கு பொறுமை காட்ட வேண்டியது அவசியம். நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பொறுமையாக இருந்து எதிரணி மீது அழுத்தத்தை செலுத்தினோம் வெற்றி பெற்றோம்” என்று கூறியிருக்கிறார்.