ஜடேஜாவுக்காக நான் ஒதுக்கப்படறேனா.. அந்த அரசியல்தான் சரியில்ல.. பொறாமை கிடையாது – அஸ்வின் பேச்சு

0
39
Ashwin

இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தனக்கு சில நேரங்களில் இடம் கிடைக்காத பொழுது ரவீந்திர ஜடேஜா மீது பொறாமை உணர்வு ஏற்படுகிறதா? என்பது குறித்து வெளிப்படையாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக பல கட்டங்களில் கடுமையாக இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உழைக்கக்கூடியவராக இருப்பார். ஆனால் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வரும் பொழுது ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வினை கழட்டி விடுவார்கள். இது உண்மையில் யாரையும் மனம் நோக வைக்கும் செயலாக அமைகிறது. தற்போது இது குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் இரட்டையர்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா இதே பட்டியலில் பிசன் சிங் பேடியை தாண்டி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு விதமான அணுகுமுறையை பந்துவீச்சில் கொண்டிருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகம் திட்டமிடுவார், ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தை நம்பி தொடர்ந்து ஒரே முறையில் பந்தை வீசிக்கொண்டே இருப்பார். அதே சமயத்தில் பந்துவீச்சை தாண்டி இருவரும் பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பையும் கொடுக்கக் கூடியவர்கள். எனவே இந்த இரட்டையர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகளில் பெரும் பங்கை கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜடேஜா மீது பொறாமையா?

தற்போது ஜடேஜா பற்றி பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “ஜடேஜா நான் பார்த்த மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். அவரைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் இயல்பானவை. பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடிய எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை புரிந்து கொண்டிருப்பதால் எங்கள் உறவு மேம்பட்டு இருக்கிறது. நான் அதிகம் சிந்திப்பேன் ஆனால் அவர் அப்படி செய்ய மாட்டார். இதை புரிந்துகொள்ள எங்களுக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. தற்பொழுது எங்களுக்குள் வேலை சம்பந்தமான நல்ல உறவு இருக்கிறது.

எனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காதது ஜடேஜாவின் தவறு கிடையாது. அவரை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு எனக்கு பொறாமையும் இல்லை. பொறாமை என்பது நாம் கைவிட வேண்டிய ஒரு விஷயமாகும். யாருக்காவது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அது தவறான ஒரு விஷயம் கிடையாது, அணியின் இயக்கவியல் சம்பந்தப்பட்டது.

இதையும் படிங்க : பாபர் அசாம் அந்த ஒரு விஷயம் உங்களுக்கு தேவையா?.. ஷான் மசூத் பண்ணது தப்பு – தினேஷ் கார்த்திக் கருத்து

மேலும் வெளிப்புறத்தில் என்ன மாதிரியான ஒப்பீடுகள் இருக்கிறது என்பதை விட நாம் நம்முடைய உத்வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீரர்களின் தனிப்பட்ட தகுதியை காட்டிலும், ஒவ்வொரு முறை அணி தேர்வு செய்யப்படும் பொழுதும், நாம் அதில் அரசியலைக் காட்டி விமர்சனம் செய்கிறோம். இப்படியான விஷயத்தில் அரசியலைக் கொண்டு வந்து இணைத்து பேசக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -