பாபர் அசாம் அந்த ஒரு விஷயம் உங்களுக்கு தேவையா?.. ஷான் மசூத் பண்ணது தப்பு – தினேஷ் கார்த்திக் கருத்து

0
35
DK

தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் மிகவும் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாபர் அசாமுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரு நேரத்தில் பாபர் அசாம் விராட் கோலியின் போட்டியாளராக பரவலாக பல முன்னாள் வீரர்களால் கூறப்பட்டார். விராட் கோலி தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாபர் அசாம் பேட்டில் இருந்து பல சதங்கள் போட்டியது. இதன் காரணமாக பாபர் அசாம் விராட் கோலியை தாண்டி நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுத்து விட்டார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

திடீர் சரிவு

இந்த நிலையில் விராட் கோலி 2022 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து மீண்டும் வந்தார். அதற்கடுத்து அவருக்கு 2022 ஆம் ஆண்டில் அருமையான டி20 உலகக் கோப்பைத் தொடர், அதைவிட அருமையான இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் அமைந்தது. அவர் இழந்ததை மீண்டும் பிடித்தார்.

அதே சமயத்தில் சொல்லி வைத்தார் போல விராட் கோலி பேட்டிங் ஃபார்முக்கு வந்ததும் பாபர் அசாம் பேட்டிங் ஃபார்ம் சரிந்தது. இரண்டு உலக கோப்பையிலும் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். கடைசியாக 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக திணறுவது மேலும் விமர்சனத்தை உருவாக்குகிறது.

- Advertisement -

பாபர் அசாம் மறுபரிசீலனை செய்யணும்

இந்த நிலையில் பாபர் அசாம் குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “பாபர் அசாம் ஒரு சிறந்த வீரராக சிறந்த பேட்டிங் திறனை பெற்றிருக்கிறார். அவரது இந்த திறனை பற்றி யாருமே சந்தேகம் கொள்ள முடியாது. இருந்தாலும் கூட கேப்டனாக அவர் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன். எனவே அவர் கேப்டன் பதவியை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ரோகித் வாஷிங்டன் சுந்தருக்கு செஞ்சதே போதும்.. அவர மாதிரி தங்கத்தை பார்த்ததில்லை – இந்திய பீல்டிங் கோச் பேச்சு

பாகிஸ்தான் அணி பங்களாதேஷ அணிக்கு எதிரான அந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவசரப்பட்டு சீக்கிரத்தில் முதல் இன்னிங்சில் டிகளர் செய்துவிட்டது. ஆசியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் முதல் இன்னிங்ஸில் நீங்கள் எவ்வளவு நீண்ட நேரம் பேட்டிங் செய்து ரண்களை எடுக்கிறீர்கள் என்பது பற்றியதுதான். இப்படி இருக்கும் பொழுது பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் அவசரப்பட்டு டிக்ளர் செய்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -