ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய கேப்டன் பொறுப்பில் தான் எப்பொழுதும் தானாகவே இருக்க விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இருக்கும் அழுத்தத்தை விட தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு அழுத்தம் கூடுதலாக மாறி வருகிறது. கட்டாயம் இந்த முறை சொந்த நாட்டில் இந்திய அணியை வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது.
பேட் கம்மின்ஸ் சோகம்
இதுவரையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. மேலும் ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு எதிராக வென்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியும் அவர் இருந்ததில்லை.
இப்படி அவர் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் வெற்றியை பார்க்காதவராக இருந்து வருகிறார். தனிப்பட்ட முறையிலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டியது அவருக்கு காரணம் இருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து பெரிய அளவில் ஆஸ்திரேலிய பக்கத்தில் அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது “நான் இதுவரையில் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைய வைத்தது கிடையாது. சமீபத்தில் இதை நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு இது புரிந்தது. என்னுடைய சில வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் நான் இருந்ததில்லை”
“ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன்களை திரும்பிப் பார்த்தால் அவர்கள் பெரிய அளவில் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். நாம் கேப்டனாக வரும் பொழுது நாமும் அவர்களைப் போல செய்வோம் என்று நினைக்கிறோம். ஆரம்பத்தில் எனக்கும் இந்த மாதிரியான விஷயங்கள் இருந்தது”
இதையும் படிங்க : நாளை முதல் டெஸ்ட்.. 5 நாள் மழை வாய்ப்பு.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விவரங்கள்.. முழு தகவல்கள்
“எனவே நான் மற்றவர்களை பிரதிபலிக்க விரும்புகிறேன் அல்லது நான் நானாக இருக்க விரும்புகிறேனா? என்கின்ற கேள்வி என்னிடம் எழுந்தது. அப்பொழுது நான் நானாகவே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் என்னால் அப்படித்தான் இருக்க முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.






