“தோல்வியின் பாதையை மாற்ற வேண்டுமானால் இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை ஆட வைத்தே ஆக வேண்டும்” – கொல்கத்தா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அறிவுரை!

0
219

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்றைய நாள் டபுள் ஹெட்டர் நடக்க இருக்கின்றன . இதில் மூன்று முப்பது மணி அளவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளும் இரவு ஏழு முப்பதுக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளும் மோத இருக்கின்றன ..

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் சென்னை மற்றும் மும்பை காட்டுத்தபடியாக வெற்றிகரமாக அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். மும்பை அணி ஐந்து ஐபிஎல் பட்டங்களையும் சென்னை அணி 4 ஐபிஎல் பட்டங்களையும் இதுவரை வேண்டி இருக்கிறது . இவர்களைத் தொடர்ந்து இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றிருக்கும் அணி தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . இரண்டு சாம்பியன் பட்டங்களுமே கௌதம் கம்பீர் அணிக்கு கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது இறுதி போட்டிகள் வரை தகுதி பெற்ற கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை . இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது அந்த அணி . முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற்று தங்களை ஒரு அபாயகரமான அணியாக முன்னிறுத்தியது கொல்கத்தா .

அதன் பிறகு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . போட்டி துவங்குவதற்கு முன்பாகவே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு வலி காயம் காரணமாக அணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது . இந்நிலையில் புதிய கேப்டன் தலைமையில் ஆடிவரும் கொல்கத்தா அணி நன்றாகவே விளையாடி வந்தாலும் ஒரு அணியாக செயல்பட அந்த அணி தவறி கொண்டிருக்கிறது .

அந்த அணியின் துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் மட்டுமே தொடர்ச்சியாக ரண்களை குவித்து வருகிறார். இவர் கடந்த போட்டியில் 100 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும் அணியாக இணைந்து இதுவரை ஒரு வெற்றி பெற்றதாக கூட கருத முடியவில்லை

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய ஒரு சில மாற்றங்கள் குறித்து பேசி இருக்கிறார் இந்தியன் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா. இது பற்றி பேசிய அவர்” கொல்கத்தா அணியின் மூன்று ஸ்பின்னர்களும் திறம்பட செயல்படுகின்றனர் பந்துவீச்சுத் துறையில் அவர்கள் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . வேகப்பந்து வீச்சிற்க்கு லோகி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையும் பெரும்பாலும் சீர் செய்யப்பட்டு இருக்கிறது . ஆனால் ஆப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு துவக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என தெரிவித்தார் . இதன் மூலம் அவர்களின் மேல் வரிசை இன்னும் பலப்படும் எனவும் கூறினார் .