தமிழ்நாட்டில் சூரிய குமாருக்கு ஏற்பட்ட சோகம்.. ருதுராஜுக்கு அடுத்தடுத்து நெருக்கடி.. துலீப் டிராபி நிலைமை என்ன?

0
59
Ruturaj

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த வருடம் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணியின் பேட்டிங்கில் சர்பாராஸ் கான் விளையாட வரவில்லை. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நட்சத்திர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வரவில்லை. பெரிய எதிர்பார்ப்பு இருந்த இந்த போட்டியில் ஒருதலைப் பட்சமாக முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் சோகம்

இந்திய அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடுவதற்கு வந்தார். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதற்கு அடுத்து தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் பொழுது முசீர் கான் வீசிய பந்தை தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் லெக் சைடு ஸ்வீப் ஷாட் அடித்தார். அப்பொழுது லெக் நிப்பில் இருந்த சூரியகுமார் யாதவ் பந்தை தடுப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரது கைவிரலில் பட அவர் வலியால் துடித்தார். இந்த நிலையில் மேற்கொண்டு அவர் பீல்டிங் செய்யாமல் களத்தை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

ருதுராஜிக்கு நெருக்கடி

தற்போது சூரியகுமார் யாதவுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அவர் இதற்கு அடுத்து ஐந்தாம் தேதி துவங்கும் துலீப் டிராபி போட்டியில் ருதுராஜ் கேப்டனாக இருக்கும் சி அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஒருவேளை அவருக்கு காயம் கவலை அளிப்பதாக இருந்தால் நிச்சயம் அவரை உள்நாட்டு தொடரில் விளையாட வைக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க : 256 ரன் முன்னிலை.. 2வது நாளிலேயே இலங்கைக்கு தோல்வி உறுதி.. இங்கிலாந்து அதிரடி பேட்டிங் பவுலிங்.. 2வது டெஸ்ட்

ஒருவேளை சூரியகுமார் யாதவ் துலீப் டிராபியில் ருதுராஜ் அணிக்காக விளையாடவில்லை என்றால் அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும். இதற்கு முன்பாக இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் உடல் நலக்குறைவு காரணமாக ருதுராஜ் சி அணியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ருத்ராஜுக்கு கூடுதல் நெருக்கடி தற்பொழுது உருவாகி இருக்கிறது.

- Advertisement -