ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க் மைதானத்தில் ஜூன் ஒன்பதாம் தேதி நடக்க இருக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் மிக விரிவாக பேசியிருக்கிறார்.
இதுவரை நடைபெற்று இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி ஒரே முறை மட்டும் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள். பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
தற்போது இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பகார் ஜமான் மட்டுமே கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார். இறுதிக்கட்டத்தில் இப்திகார் அகமது கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே 125 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடுகிறார்கள். அவர்களின் பேட்டி எந்த வகையிலும் பயமாக இல்லை. ஆனால் பந்துவீச்சுதான் பயமாக இருக்கிறது.
அவர்களிடம் ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இருக்கிறார்கள். நசீம் ஷா இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரை காயத்தால் தவறவிட்டார். தற்பொழுது அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆடுகளமும் பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். மேலும் 2022 ஆம் ஆண்டு விராட் கோலி வென்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் கூட விராட் கோலிக்கு அவர் ஒரு எட்ஜ் எடுத்தார். ஆனால் ஸ்லிப்பில் அந்த கேட்ச் தவற விடப்பட்டது.
பாகிஸ்தான் எந்த பார்மில் வந்தாலும் கவலை இல்லை. அவர்கள் இங்கிலாந்து அணியிடம் தோற்றுதான் வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் வரலாறு எங்களுக்கு தெரியும். அவர்கள் திடீரென்று ஏதாவது செய்வார்கள். கடந்த முறை கூட அவர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தார்கள்.
இதையும் படிங்க : ரோகித் கோலி சூர்யா.. இந்திய அணியை ஊனப்படுத்தறாங்க.. ஆஸி இங்கிலாந்து இப்படி இல்லை – இர்பான் பதான் பேச்சு
மேலும் நியூயார்க் மைதானம் திறந்தபடி இருக்கின்ற காரணத்தினால், மேலும் ஆடுகளம் ஆஸ்திரேலியா ஆடுகளம் போல பவுன்ஸ் கொண்டதாக உருவாக்கப்பட்ட இருப்பதால், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்து வீசுவார்கள். இந்திய அணியின் பக்கம் பும்ரா இருக்கிறார். மேலும் சிறந்த சுழல் பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. குல்தீப் யாதவ் சிறப்பாக இருப்பார். எனவே இந்தப் போட்டி சம நிலையில் தற்போது இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.