“விராட் கோலியை பார்த்துமே.. கில் ஸ்ரேயாஸ் திருந்தல.. இப்படி இருந்தா எப்படி?” – சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

0
934
Gavaskar

நேற்று இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சாதகமான மகாராஷ்டிரா புனே மைதானத்தில் எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, பங்களாதேஷ் அணியை மிக எளிமையாக வீழ்த்தி இருக்கிறது!

நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரர்கள் அதைப் பயன்படுத்தி சிறப்பான துவக்கத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் கட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது பங்களாதேஷ் அணி 300 ரன்கள் தாண்டும் என்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் குல்திப் யாதவ் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு, இந்திய அணியின் பௌலிங் யூனிட் அந்த விரிசலை பெரிய ஓட்டையாக மாற்றி, பங்களாதேஷ் அணியை 256 ரன்களுக்கு சுருட்டி விட்டார்கள். இந்த மைதானத்தில் இந்தியா மாதிரியான ஒரு அணியுடன் போட்டியிட வேண்டும் என்றால் இன்னும் நூறு ரன்கள் சேர்த்து எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 19 பந்துகளில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவருமே மெகதி ஹசன் மிராஸ் பந்துவீச்சை தாக்கி ஆட வேண்டும் என்று போய் வெட்கட்டை கொடுத்தார்கள்.

தற்பொழுது இவர்கள் இருவரின் பேட்டிங் அணுகுமுறை பற்றி பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய பொறுமையை இழந்தார். அவர் 19 பந்துகளில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, தனது விக்கெட்டை தூக்கி எறிந்தார். இதையேதான் சுப்மன் கில்லும் செய்தார்.

- Advertisement -

விராட் கோலியை பார்த்தால் அப்படி அவர் செய்ய மாட்டார். விராட் கோலி எப்போதாவதுதான் இப்படி போய் ஆட்டம் இழப்பார். அவர் தன்னுடைய விக்கெட்டை பந்துவீச்சாளர்களைப் பெற வைக்கிறார். இதுதான் உங்களுக்கு தேவையான விஷயம். 70 80 ரன்கள் அவர் இருந்த பொழுது சதம் அடிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்ததை உணர்ந்தார். ஏன் அடிக்க கூடாது? சதம் என்பது தினமும் வருவது கிடையாது.

சதம் அடிப்பது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கில் மற்றும் ஸ்ரேயாசுக்கு இது முக்கியம். கில் குறைந்தபட்சம் சதங்கள் அடிக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் அப்படி கிடையாது. பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் இப்படி ஒரு விக்கெட்டில், இப்படி ஒரு பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக கிடைத்த அருமையான வாய்ப்பை அவர் தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார் என்று கடுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்!