“நாங்க வச்சு வளர்த்தி விடுவோம் அப்புறமா அவங்கள சூப்பர் ஸ்டார்னு சொல்லுவாங்க!” – ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவை காட்டி பரபரப்பு பேச்சு!

0
3648
Rohitsharma

ஐபிஎல் டி20 தொடர் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி ஐந்து முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் அணி!

இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது இளம் இந்திய திறமைகளைக் கண்டறிவதற்காக இந்த அணிக்கு அமைக்கப்பட்டு இருக்கும் குழுதான் என்று சொல்லலாம்!

- Advertisement -

இவர்கள் இந்தியாவில் நடக்கும் பல்வேறு போட்டிகளை நேரில் சென்று பார்த்து அதன் மூலம் நேரடியாக வீரர்களின் திறமையை உணர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வருகிறார்கள்.

இப்படியான வீரர்கள் அணிக்குள் வருவதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் மைதானம் மற்றும் முகாமில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பட்டை தீட்டப்படுகிறார்கள்.

உதாரணமாக ஜஸ்ட்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோரைக் கூறலாம். இன்று மூவரும் ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமானவர்கள்.

- Advertisement -

இதில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய பங்களிப்பை தருபவர்கள். மேலும் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்களை கண்டறிவதற்கான இந்த தொடர்ச்சி இந்த முறையும் திலக் வர்மா, நெகில் வதேரா என்று தொடர்ந்து வருகிறது.

தற்பொழுது இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா “பும்ரா, ஹர்திக், க்ருனால் இவர்களின் கதை மாறியேதான் எதிர்காலத்தில் திலக் வர்மா மற்றும் வதேரா கதையும் அமையப்போகிறது.

இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து எங்களை சூப்பர் ஸ்டார்களின் அணி என்று மக்கள் கூறுவார்கள். இரண்டு இளம் வீரர்களும் மும்பை மற்றும் இந்திய அணியில் எதிர்காலத்தில் முக்கிய பங்கை ஆற்றுவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!