மீண்டும் கலக்கிய ஜெய்ஸ்வால்-ரோகித் ஜோடி… சதத்தை நெருங்கும் விராட் கோலி.. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வலுவான நிலை!

0
2096

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடிக்க, நாள் முடிவில் விராட் கோலி 87 ரன்களுக்கு களத்தில் இருந்தார். இந்திய அணி 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஓபனிங் ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் மீண்டும் ஒருமுறை சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்த ஜோடி, பின்னர் வந்து ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது.

கடந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் அரைசதம் அடித்தார். அதை சதமாக மாற்றி பல்வேறு சாதனைகளை மீண்டும் படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக 57 ரன்களுக்கு ஜெசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்ததாக உள்ளே வந்த சுப்மன் கில் 10 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பலான முறையில் அவுட் ஆனார். மறுபக்கம் ஓப்பனிங் இறங்கி அரைசதம் அடித்திருந்த ரோகித் சர்மா 80 ரன்கள் இருந்தபோது போல்ட் ஆனார். கடந்த போட்டியில் சதம் அடித்ததை மீண்டும் ஒருமுறை செய்து காட்ட தவறினார்.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த ரகானே வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 182 ரன்களுக்கு நான்கு விக்கெடுகளை இழந்து சற்று தடுமாற்றம் கண்டது. உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் இருந்த இந்திய அணி, அதன் பிறகு வந்து தேநீர் இடைவேளைக்குள் நான்கு விக்கட்டுகளை இழந்து சொதப்பியது.

தேநீர் இடைவேளைக்கு பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் நாள் முடிவில் வேறு விக்கெடுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 5 ஆவது விக்கெட்டுக்கு 106 பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

இதில் விராட் கோலி 87 ரன்கள் உடனும், ஜடேஜா 36 ரன்கள் உடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கின்றனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடந்த போட்டியில் 76 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்க தவறிய விராட் கோலி, இம்முறை 87 ரன்களில் இருக்கிறார். நிச்சயம் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.