ஜெய்ஸ்வால் நீ மும்பை பையன்.. மும்பை கூட மட்டுமே சதம் அடிக்கிற.. வேற யாரும் தெரியலையா – கவாஸ்கர் பேச்சு

0
127
Jaiswal

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இருந்தார். ஆனால் அவருக்கு சில ஆட்டங்கள் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் சுவாரசியமான கேள்வி ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் முதல் ஏழு ஆட்டங்களில் ஒரு போட்டியில் கூட 40 ரன்கள் தொடவில்லை. அவருக்கு இந்த ஆண்டு மிகவும் சுமாரானதாக ஐபிஎல் தொடரில் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக மெல்ல மெல்ல அவரை சுற்றி விமர்சனங்கள் உருவாகவும் ஆரம்பித்தது.

- Advertisement -

மேலும் டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்த மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாதம் இறுதியில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பும் வர இருக்கிறது. எனவே இதெல்லாம் சேர்ந்து அவர் மீது நிறைய நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருந்தது.

இப்படியான நிலையில் நேற்று 59 பந்துகளை சந்தித்து ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். இவருக்கு அது இரண்டாவது ஐபிஎல் சதம். மேலும் இந்த இரண்டு ஐபிஎல் சதங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வந்திருக்கிறது. அத்தோடு 22 வயதில் இரண்டு ஐபிஎல் சதங்கள் அடித்த ஒரே வீரர் என்கின்ற சாதனையையும் படித்திருக்கிறார்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் ஜெய்ஸ்வாலிடம் பேசிய சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பும் பொழுது “ஜெய்ஸ்வால் நீங்கள் ஒரு மும்பை பையன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக உங்களது இரண்டாவது சதம் இது. அவர்களுக்குஎதிராக மட்டும் சதங்கள் அடிக்க என்ன காரணம்? மற்றவர்களுக்கு எதிராக இந்த சதங்களை அடிக்க முடியாதா?” என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த இந்திய டி20 கேப்டனா இந்த பையனை தயார்படுத்துங்க.. வேற யாரும் வேண்டாம் – ஹர்பஜன் சிங் பேட்டி

இதற்கு பதில் அளித்து பேசிய ஜெய்ஷ்வால் கூறும் பொழுது “என் மனதில் எதுவும் கிடையாது சார். நான் சிறப்பானதை கொடுக்க முயற்சி செய்கிறேன். நாட்கள் சரியாக வருகிறது சில நாட்கள் சரியாக வருவதில்லை. நான் வழக்கம்போல என்னுடைய பயிற்சியில் சிறப்பாக இருக்க முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.