தற்போதாவது 13-வது உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் அர இறுதிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற இருக்கின்ற நிலையில் இன்று இறுதி லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நெதர்லாந்த அணிகள் மோதி வருகின்றன. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆடி வருகிறது.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்களான கில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அரசதம் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி தனது பெயரை பதிவு செய்து இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் 594 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். இவருக்கு அடுத்த இடத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் டிகாக் 591 ரன்கள் உடன் இருக்கிறார்.
மேலும் இந்த உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா ஒன்பது போட்டிகளில் விளையாடி 503 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஆட்டத்தை அணுகிய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் ரோஹித் சர்மா சுயநலமில்லாமல் அணிக்காக விளையாடி வருவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் அவரது புதிய அணுகுமுறையால் இந்த உலகக் கோப்பையில் ஐந்து சதங்களை தவற விட்டிருக்கிறார் எனவும் அக்தர் தெரிவித்து இருந்தார். தற்போது இந்த உலகக்கோப்பையில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு ரோகித் சர்மா தான் காரணம் என இந்திய கேப்டனுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான்.
இது தொடர்பாக இன்றைய போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் பேசிய இர்பான் பதான் ” இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஆடும் விதம் விராட் கோலி அதிக ரிஸ்கில்லாமல் ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மேலும் அவர் துவக்கத்திலேயே அதிரடியாக ஆடுவதால் பின் வரிசையில் வரும் வீரர்கள் செட்டில் ஆவதற்கு நேரத்தையும் வழங்குகிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் இர்ஃபான் ” ரோஹித் சர்மா தனது ஆட்டத்தின் அணுகுமுறையை இந்திய அணிக்காக மாற்றி இருக்கிறார். இதற்காகவே நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். ரோகித் சர்மா இந்திய அணிக்காக செய்ததைப் போல் வேறு எந்த ஒரு கேப்டனும் செய்வதற்கு சாத்தியமில்லை. ரோஹித் சர்மா எப்படி தனது இன்னிங்ஸை கட்டமைப்பார் என்று நமக்கு தெரியும். ஆனால் இன்று அணிக்காக அவர் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ஆடி வருகிறார் என தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்.
Irfan Pathan in commentary: 🗣️
— 12th Khiladi (@12th_khiladi) November 12, 2023
“ The way Rohit Sharma has batted in this tournament, that has allowed Virat Kohli to play risk free cricket.”#RohitSharma #INDvsNED pic.twitter.com/OfTKXz5Qd5
மேலும் விராட் கோலி களம் இறங்கியதும் தூக்கத்திலேயே அதிரடியாக ஆடி ரன் குவிக்காமல் சிறிது நேரம் எடுத்து ஆடுவதற்கு ரோஹித் சர்மாவின் இந்த அதிரடியான அணுகுமுறை தேவையான அவகாசத்தை வழங்கி இருக்கிறது எனக் கூறி முடித்திருக்கிறார் இர்பான் பதான். இந்திய அணி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் ரண்களை குவிப்பதற்கு ரோஹித் சர்மாவின் புதிய அணுகுமுறை ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.