“விராட் கோலியை திட்டிய தோனி” – ரகசியத்தை முதல் முறையாக வெளியிட்ட இஷாந்த் சர்மா

0
2111

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியை அனைவரும் கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் தோனி களத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்ட மாட்டார். அப்போதெல்லாம் பெரிய அளவில் வீரர்களை களத்தில் திட்டவே மாட்டார்.

கேட்சை கோட்டை விட்டாலும் சரி, பில்டிங்கை மிஸ் செய்தாலும் சரி தோனி பதற்றம் அடையாமல் இருப்பார். ஆனால் ஐபிஎலில் தற்போது எல்லாம் தோனி கோபப்பட்டு நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தோனி கோபப்படுவது புதிதல்ல.

- Advertisement -

அவர் அப்போதே அப்படிதான் என்று குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார் இந்தியனின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா. தோனிக்கும், விராட் கோலிக்கும் உள்ள நட்பு என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். தோனியின் நட்பை தாம் எவ்வாறு பாதுகாப்பதாக கோலி பலமுறை கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலியை தோனி திட்டி இருப்பதாக இஷாந்த் சர்மா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதை கேட்டவுடன் ரசிகர்கள் என்னப்பா சொல்றீங்க என்று நினைப்பார்கள். இந்த சம்பவம் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது ஆகும்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஷிகர் தவான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று சதம் அடித்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஷிகர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

இதனால் அவர் பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் விராட் கோலி மோசமான ஷாட் ஒன்றை ஆடி ஆட்டம் இழந்து விட்டார். இதனால் அணி நெருக்கடியான கட்டத்திற்கு தள்ளப்பட்டது.

எனினும் பின்வரிசை வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ஆஸ்திரேலியாவை விழித்தினார்கள். இது குறித்து ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலியை அழைத்த தோனி ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாட மாட்டார் என்று உனக்குத் தெரியும்.

ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருக்கும் போது இப்படி ஒரு ஷாட்டை ஆடலாமா என்று விராட் கோலியை பார்த்து தோனி கேட்டார். இதை சொல்லும்போது தோனி கோபப்படவில்லை. தாம் தவறு செய்து விட்டோம் என்பதை விராட் கோலி உணரும் வகையில் தோணி பேசியதாக இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார். இப்படி கிரிக்கெட் குறித்து பல நுணுக்கங்களை இளம் வீரர்களுக்கு தோனி உணர்த்திருப்பதாக இஷாந்த் சர்மா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.