இந்திய அணி 40 நாளுக்கும் மேற்பட்ட ஓய்வுக்கு அடுத்து இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என சுப்மன் கில் சில காரணங்களை கூறியிருக்கிறார்.
கடந்த வாரத்தில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்து, முதல் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றி தந்த நம்பிக்கையுடன் இந்தியா வர இருக்கிறது.
பங்களாதேஷ் தரப்பில் பேச்சு
பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றியதுமே பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ இந்திய அணிக்கு எதிராக தங்களால் வெற்றி பெற முடியும் எனவும், மேலும் தங்கள் அணியின் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மெகதி ஹசன் மிராஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது போலவே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோரிபுல் இஸ்லாம் தங்களால் இந்திய அணியை வெல்ல முடியும் என்று உறுதியாக நம்புவதாகவும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி தந்த நம்பிக்கையை பயன்படுத்தி இந்திய அணியை வீழ்த்துவோம் என்றும் கூறியிருக்கிறார். பங்களாதேஷ் தரப்பு இந்த முறை மிகவும் நம்பிக்கையாக இந்தியாவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முக்கிய விஷயங்கள்
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் சுப்மன் கில் பங்களாதேஷ் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். மேலும் அந்த அணியிடம் முக்கிய இரண்டு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனியை நான் விக்கெட் எடுக்கல.. அது செஞ்சத விராட் பையாதான்.. இத சொன்னார் நடந்தது – யாஷ் தயால் பேட்டி
இதுகுறித்து சுப்மன் கில் கூறும்பொழுது “தற்போது நீங்கள் எந்த சர்வதேச அணியையும் குறைவாக மதிப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக பங்களாதேஷ் கிரிக்கெட் விளையாடிய விதம் குறிப்பாக பாகிஸ்தானில் அவர்கள் விளையாடிய விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவர்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அழுத்தத்தை உள்வாங்கிய விதம் என இந்த இரண்டையும் புறக்கணிக்க முடியாது. உறுதியாக சொல்கிறேன் இந்த தொடர் மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.