தோனியை நான் விக்கெட் எடுக்கல.. அது செஞ்சத விராட் பையாதான்.. இத சொன்னார் நடந்தது – யாஷ் தயால் பேட்டி

0
216
Dayal

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஆர்சிபி வீரர் யாஷ் தயால் மகேந்திர சிங் தோனி விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிலையில் அதற்கு விராட் கோலி தான் முக்கியமான ஒரு யோசனையை கூறினார் என தற்பொழுது வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடைபெற்று வரும் துலீப் டிராபியில் பி அணியில் இடம் பெற்றிருக்கும் யாஷ் தயால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உதவி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்து வருகிறார். இவர்கள் பேட்ஸ்மேனுக்கு தனிப்பட்ட கோணத்தை உருவாக்குவார்கள், மேலும் வலது கை பேட்ஸ்மேனுக்கு பந்தை உள்நோக்கி ஸ்விங் செய்வார்கள் என்கின்ற முக்கிய விஷயங்கள் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி இவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து வீசி ஆடுகளத்தில் உருவாக்கும் கால் தடம் அணியில் இருக்கும் ஆப் ஸ்பின்னருக்கு பந்து வீசும் மிகவும் உதவி செய்யக் கூடியதாக இருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் நாதன் லயனுக்கு மிட்சல் ஸ்டார்க் இந்த வகையில் உதவி வருகிறார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இப்படியான உதவியை யாஷ் தயால் செய்ய முடியும்.

- Advertisement -

விராட் கோலி கொடுத்த ஐடியா

இந்த நிலையில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி விக்கெட்டை கைப்பற்றியது குறித்து பேசிய யாஷ் தயால் ” கடைசி ஓவரில் நான் பந்து வீசிய பொழுது தோனி முதல் சிக்ஸரை அடித்ததும் என்னால் அந்த ஓவரை வெற்றிகரமாக வீசி எங்கள் அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அப்போது விராட் பையா என்னிடம் வந்து சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் அவர் என்னிடம் தோனி பாய்க்கு பந்தை வேகமாக வீச வேண்டாம் என்றும், மெதுவாக வீசும் படியும் கூறினார். என்னுடைய மெதுவான பந்துகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் அதே பந்தை வீசவும் எனக்கு விக்கெட் கிடைத்தது.

இதையும் படிங்க : பிராட்மேன் முதல் 9000 ரன் வரை.. கோலி முறியடிக்க போகும் 4 மகத்தான சாதனைகள்.. வங்கதேச தொடரில் வாய்ப்பு

சிஎஸ்கே போன்ற ஒரு அணியை நாட் அவுட் போட்டியில் வீழ்த்தினால் வெளிப்படையாக கொண்டாட்டம் இருக்கத்தான் செய்யும். அன்று போட்டி முடிந்த பிறகு பலரும் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் சொன்னார்கள். அதில் அணி நிர்வாகத்தினர் மற்றும் வீரர்களின் உறவினர்கள் என எல்லோரும்” அடக்கம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -