இதெல்லாம் எங்களுக்கு பழக்கமே இல்லை.. ஆனா முதல்ல பேட்டிங் பண்றப்போ இதை ஏத்துகிட்டுதான் ஆகணும்- அஸ்வின் கருத்து

0
235

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்திய அணி தற்போது லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றோடு சேர்த்து மொத்தமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

லீக் போட்டிகள் பந்துவீச்சுக்கு சாதகமான அமெரிக்க ஆடுகளங்களில் நடைபெற்றாலும், தற்போது அடுத்த சுற்று போட்டிகள் ஓரளவு பேட்டிங்க்கு சாதகமான வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய பேட்டிங் வரிசையில் தற்போது பாரபட்சம் இன்றி அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஜோடி சொதப்பினால் மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் அல்லது மிடில் வரிசை சொப்பினால் கடைசி கட்ட ஆட்டக்காரர்கள் என்று இந்திய அணியின் பேட்டிங் வரிசை நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தற்போது பார்க்கையில் தனிநபர் சாதனைக்காக எந்த ஒரு வீரரும் விளையாடுவதில்லை.

குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிவிட்டு அணியின் ரன்களை உயர்த்துவதே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது கடந்த போட்டியிலேயே மிகத் தெளிவாகத் தெரிந்தது. ஒரு காலத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா தற்போது டி20 போட்டிகளில் எவ்வளவு ரன்கள் அடிக்கிறோம் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் அதிக ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடிவிட்டு செல்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க சரி இது பந்துகளை அதிகமாக எதிர்கொண்டாலும் அவரும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலேயே விளையாடினார். அதுவே பின் வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தூண்டும் வகையில் அமைகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற அணுகுமுறை தங்களுக்கு பழக்கம் இல்லை என்று கூறி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “20 அல்லது 30 ரன்கள் குவித்த பிறகு தங்களது விக்கெட்டுகள் பற்றி கவலை கொள்ளாமல் விளையாடும் அணுகுமுறை எங்களுக்கு பழக்கமே இல்லாத ஒன்று. ஆனால் நாம் முதலில் பேட்டிங் செய்யும்போது இது போன்ற அணுகுமுறையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய வீரர்கள் எல்லாரும் வெற்றிப் பசியில இருக்காங்க.. அதுக்குக் காரணம் இந்த பையன்தான்- நவ்ஜோத் சிங் பாராட்டு

அதாவது பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட் குறித்து கவலைப்படாமல் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை நாம் ஏற்றுக் கொள்வதற்கான நேரம் இது என்று அஸ்வின் கூறி இருக்கிறார். இவரது கருத்தைப் போலவே தற்போது இந்திய பேட்ஸ்மேன்களும் அணியின் ரன்களை உயர்த்துவதிlலேயே ர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -