டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தற்போது தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து மொத்தமாக இந்த தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து இந்திய வீரர்களை பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கி இந்திய கிரிக்கெட் அணி இந்த உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும். இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் பேட்டிங்,பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கி வருகிறது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பங்களிப்பு இந்திய அணிக்கு அபாரமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளில், முன்னணி வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் இளம் வீரர்கள் மிடில் வரிசையில் களமிறங்கி சவாலான ஸ்கோரை நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற இளம் வீரர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமை பண்பு மிக அபாரமாக இதுவரை இருந்துள்ளது. அவர் பீல்டிங் செட் செய்யும் விதம், தேவைக்கேற்ப பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது, அணி வீரர்களுக்கு விளையாட சுதந்திரம் கொடுப்பது என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்திய அணிக்காக ஒரு கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து இந்தியாவையும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவையும் பாராட்டி பேசியிருக்கிறார்.
இது குறித்து நவ்ஜோக் சிங் சித்து கூறும் பொழுது “தற்போது விளையாடும் இந்திய அணியின் நோக்கத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியும் என்றால் தன்னலமே இல்லாமல் வெற்றிக்காக விளையாடுவது, இந்திய அணிக்காக விளையாடுவது. எந்த ஒரு இந்திய வீரர்களும் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுவதில்லை. நீங்கள் பார்த்தாலே புரியும் ஒவ்வொரு வீரரும் வந்து மிக வேகமாக அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்கிறார்கள்.
இதையும் படிங்க:2023 அன்னைக்கும் நான் நைட் தூங்கல.. இன்னைக்கும் நான் தூங்க மாட்டேன்.. காரணம் இதுதான் – ரஷித் கான் நெகிழ்ச்சி கருத்து
இரண்டாவதாக இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவுக்கு துளி கூட வஞ்சகம் இல்லை. அவரது தலைமை பண்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. நமது இந்திய வீரர்களில் ஃபார்ம் இல்லாதவர் என்று யாரையும் கூற முடியாது. ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் ஒரு தூய்மைத்துவம் இருக்கிறது. வீரர்கள் தற்போது வெற்றியின் பசியில் இருக்கிறார்கள் அதைவிட முக்கியமானது, நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.