கிரிக்கெட் ஆரம்பித்த காலத்தில், இந்திய அணி ஃபீல்டிங்கில் பெரிதாக சோபித்ததில்லை. எதிர்பார்த்த அளவிற்கு அவர்களின் ஃபீல்டிங் அமையவில்லை. அதனால் எதிரணிக்கு நிறைய கூடுதல் ரன்கள் கிடைத்தன. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இருந்தது.
ஆனால், காலம் போக போக நம் இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்புற்றது.ராபின் சிங், முஹம்மது கெய்ப், ரவிந்திர ஜடேஜா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என பல நட்சத்திர ஃபீல்டர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர். அதனால் நம் அணியின் ஃபீல்டடிங் தரம் உயர்ந்தது.
இந்தியாவின் ஃபீல்டிங் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து. அதாவது, எதிரணி வீரர்கள் இந்திய அணியின் ஃபீல்டர்களை நம்பி, அவர்களது அணிக்கு ஃபீல்டிங் செய்யவும் அழைத்தனர். இந்த கட்டுரையில், எதிரணிக்கு ஃபீல்டிங் செய்த இந்திய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
1. பாகிஸ்தான் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ஃபீல்டிங் செய்தார்:
பாகிஸ்தான் அணி 1986–87ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
பிரபோர்நே ஸ்டேடியத்தில் சிசிஐக்கு எதிரான போட்டியில் 13 வயதான சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணிக்கு மாற்று ஃபீல்டராக நியமிக்கப்பட்டார். அப்துல் காதிர் மற்றும் மியாண்டாட் இடைவேளையின் போது மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனால் தான் மாற்று வீரராக சச்சின் உள்ளே நுழைந்தார்.
இந்நிகழ்வை பற்றி தனது ‘பிளேயிங் இட் மை வே ‘ எனும் சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். ஒயிட் லாங்–ஆனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சச்சின், 15 மீட்டர்கள் ஓடி கபில் தேவ்வின் கேட்ச்சை பிடித்தார்.
2. தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு மந்தீப் சிங் ஃபீல்டிங் செய்தார்:
SA ‘A’ had someone new fielding for their side against Ind ‘A’ on Sunday. Talk about Spirit of Cricket @mandeeps12https://t.co/Tdt9ABMAwA
— BCCI (@BCCI) August 10, 2015
2015ல் தென்னாபிரிக்கா ‘ஏ’ அணிக்காக மந்தீப் சிங் ஃபீல்டிங் செய்ய வேண்டிய நிலை உண்டானது. இப்போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது. நான்கு தென்னாபிரிக்கா வீரர்களுக்கு வயிற்று வழி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டது.
அதனால் மந்தீப் சிங், தென்னாபிரிக்கா ஜெர்சி அனைத்து ஃபீல்டிங் செய்தார். அப்போட்டிக்குப் பிறகு, இந்தியாவுக்கு வருகை தந்த 10 வெளிநாட்டு வீரர்கள் ஃபுட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மந்தீப் சிங் ஃபீல்டிங் செய்ததால், இந்திய அணியில் அவருக்கு பதில் மயங்க் அகர்வாலை ஆட அழைத்தார் ராகுல் டிராவிட். இப்போட்டியில், அகர்வால் அடித்த 130 தான், இந்திய அணியை 37.4 ஓவரில் 245 ரன்களை எளிதில் துரத்த உதவியது. எனினும், அதற்கு அடுத்த வருடம் மந்தீப் சிங் இந்திய அணிக்கு முதல் முறையாக களமிறங்கினார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ற பிறகு இந்திய அணியில் அவரின் இடத்தை இழந்தார் மந்தீப் சிங்.
3. ஸ்காட்லாந்து அணிக்கு ராகுல் டிராவிட் ஃபீல்டிங் செய்தார்:
Not many are aware of the fact that Rahul Dravid once turned up for Scotland in eleven games
— CRICKETNMORE (@cricketnmore) May 15, 2021
.
.#RahulDravid #TestCricket #Scotland #IndianCricket #TeamIndia pic.twitter.com/ISkw5brVLF
2003 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணி, சிறிது காலம் ஓய்வு எடுத்தப் பிறகு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது. அந்த ஓய்வுக் காலத்திலும், ராகுல் டிராவிட் தனது திறனை சோதித்துப் பார்க்க எண்ணினார்.
நேஷனல் கிரிக்கெட் லீக்கில் ஸ்காட்லாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு ராகுல் டிராவிட்க்கு தலைமை பயிற்சியாளர் ஜான் ரைட் மூலம் கிடைத்தது. 11 கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளோடு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியிலும் விளையாட ராகுல் டிரவிட்டை ஒப்பந்தம் செய்தனர்.
ஸ்காட்லாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி குவேன் ஜோன்ஸ், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை ஒப்பந்தம் செய்ய விரும்பினார். ஆனால், ராகுல் டிராவிட்டை மட்டும் தான் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்தார் ஜான் ரைட். அந்த தொடரில் நட்சத்திர நாயகன் ராகுல் டிராவிட் 600 ரன்கள் சேர்த்தார். அவருடைய சராசரி 66.3 இருப்பினும், 12 போட்டிகளில் ஸ்காட்லாந்து அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.