ஆஸி பலமான டீம்தான்.. ஆனா இந்திய அணி இந்த ஒரு விஷயத்துல கிங்னு காட்டிருக்கு – ஷம்சி பேட்டி

0
2822

கிரிக்கெட்டில் இரண்டு முன்னணி அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக பார்டர் கவாஸ்கர் டிராபி விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸி பார்டர் கவாஸ்கர் ட்ராபி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளில் முக்கிய அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கிறது. ஐசிசி கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் முதன்மையாக இருக்கும் இடத்தில் ஐபிஎல் எனும் மிக முக்கிய தொடரை இந்தியா நடத்துவதன் மூலமும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெறுவதன் மூலமாக முக்கியமான அணியாக இருக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு சீசன்களாக நடைபெற்ற வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியே இரண்டு முறையும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. மேலும் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற இதே தொடரிலும் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. எனவே இந்த இரண்டு அணிகளுக்கிடையான தொடர் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி வீரரான ஷம்சி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் டெஸ்ட் தொடர் குறித்த கேள்விக்கு தனது கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாரடர் கவாஸ்கர் 2024-2025 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியுமா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டில் சிறந்த அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா உலகின் எந்த அணியும் வீழ்த்த முடியும் என்று காட்டியுள்ளது. ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று வெற்றி பெற முடியும் என்றும் நிரூபித்திருக்கிறது.

இந்த இரண்டு அணிகளுமே மிகவும் வலுவான அணிகளாகவும் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டித் தொடர் மிகுந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். இந்தியா ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியும் என்று தனது திறமையை நிரூபித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஆஸி இதனால இந்திய டீம்க்கு சாதாரணமாயிடுச்சு.. நாங்க பல பேரு அவங்கள ஜெயிக்கவே இல்ல – ஹேசில்வுட் பேச்சு

முந்தைய காலங்களை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பந்து வீச்சில் மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. பும்ரா, சிராஜ், முஹம்மது ஷமி ஆகிய வீரர்கள் பந்து வீச்சில் சிறந்து விளங்குவதால் இந்த தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -