ஆஸி இதனால இந்திய டீம்க்கு சாதாரணமாயிடுச்சு.. நாங்க பல பேரு அவங்கள ஜெயிக்கவே இல்ல – ஹேசில்வுட் பேச்சு

0
756
Hazlewood

இந்திய அணிக்கு எதிராக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடினாலும் கூட அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் கூறியிருக்கிறார்.

கடந்த ஒரு தசாப்தமாக நான்கு முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவின் வசம் இருந்து வருகிறது. 10 ஆண்டுகளாக இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை வெல்லாதது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு பெரிய அவமானமாகவே இருக்கிறது. இந்தியாவை டெஸ்ட் தொடரில் வென்ற வீரர்களில் இப்பொழுதும் ஆஸ்திரேலியா அணியில் இருக்கக்கூடியவராக ஜோஸ் ஹேசில்வுட் இருக்கிறார்.

- Advertisement -

வெளிநாட்டில் இந்திய அணியின் வெற்றி ரகசியம்

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை தரமான பேட்ஸ்மேன் எப்பொழுதுமே கிடைத்து வந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி அமையவில்லை.

தற்போது இந்த நிலைமை அப்படியே அடியோடு மாறி இருக்கிறது. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே தரமான பவுலிங் யூனிட் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறது என்று கூறலாம். இதன் காரணமாக இப்பொழுதெல்லாம் இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படுவதில்லை. அப்படி அமைத்தால் அது இந்திய அணிக்கு சாதகமாகவே முடிகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா கண்டிஷன் இந்திய அணிக்கு பழக்கம் ஆகிவிட்டது

இதுகுறித்து ஜோஸ் ஹேசில்வுட் கூறும் பொழுது “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை சுருக்கமாக கூற வேண்டும் என்றால் அது மிகவும் சவாலான ஒன்று என்று சொல்லலாம். அது மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய கண்டிஷனுக்கு விளையாடுவதற்கு பழகிவிட்டார்கள். இங்கு விளையாட அவர்கள் விரும்புகிறார்கள்.

நடைபெற இருக்கும் தொடர் மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். அவர்களின் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக இருக்கிறது. டாப் ஆர்டராக இருந்தாலும் சரி அதற்கு கீழ் வரக்கூடியவர்களாக இருந்தாலும் சரி சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். நான் முதன் முதலில் அவர்களுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றேன். அதுதான் நாங்கள் கடைசியாக அவர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற டெஸ்ட் தொடர் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : யார் கேப்டனா இருந்தாலும்.. களத்துல ரிஷப் பண்ட்தான்.. இந்த சம்பவத்தை பாருங்க – WV ராமன் பாராட்டு

அப்போது இந்திய அணியில் விளையாடிய பலவீரர்கள் எப்பொழுதும் இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய அணியில் எங்கள் கேப்டன் மற்றும் ஹெட், கிரீன் போன்ற பலவீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஒரு சவால் நிறைந்த பெரிய கோடை காலம் வர இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -