மொத்த இந்தியால எனக்கு ஃபேவரைட் கிரவுண்ட் சென்னைதான்.. அதுக்கு காரணம் இருக்கு – ஷம்சி பேட்டி

0
147

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டை தாண்டி அது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. இந்திய மக்களில் பெரும்பான்மையோர் நேசிக்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் முதல் இடம் பிடிக்கிறது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸி இந்தியாவில் தனக்கு பிடித்த மைதானத்தை தேர்வு செய்து அதற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது அதிக அளவில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழியும் மைதானங்களாக மும்பை வான்கடே மைதானம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சென்னையில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் குறிப்பிடத்தக்க கவனத்தை பெறுகின்றன.

அதிலும் சென்னையில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணி என்பதை தாண்டி எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிக்கு தங்கள் பாராட்டை தெரிவிப்பதில் சிறு தயக்கம் கூட காட்டுவதில்லை. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளரும் ஐபிஎல்லில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடிய சம்ஷி இந்தியாவில் தனக்கு விருப்பமான மைதானமாக சென்னை சேப்பாக்கத்தை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “இந்தியாவில் தனக்கு பிடித்த மைதானமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் சென்னை ரசிகர்கள் உண்மையிலேயே அறிவாளிகள். யார் விளையாடினாலும் அந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடியதற்காக இரு அணிகளையும் அவர்கள் பாராட்ட தவறுவதில்லை. எனவே சென்னை மைதானமே தனக்கு விருப்பமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போது அதில் தென்னாபிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்காற்றிய சம்ஷி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவ நாங்க சொந்தமா நினைக்கிறோம்.. காரணம் இவ்வளவு இருக்கு – ஆப்கான் கேப்டன் நெகிழ்ச்சி

இந்திய வீரர்களில் மகேந்திர சிங் தோனி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கூட சென்னை மைதானம் மிகவும் பிடித்த மைதானமாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட டிராவிட் சென்னை மக்களின் கிரிக்கெட் அறிவு திறன் குறித்து வெகுவாகவே பாராட்டினார். மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி அவரது தலைமையில் 5 பட்டங்களை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -