“நான் திரும்ப வந்துட்டேன் செம ஃபிட்டா இருக்கேன். உலக கோப்பை இந்தியா மேட்ச்ச பாத்துக்கலாம் ” – ஷாகின் அப்ரிடி அதிரடி பேட்டி!

0
958
Shaheen Afridi

இந்த முறை இந்தியாவில் முழுமையாக நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான் அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கிறது!

இன்னும் மூன்று மாத காலம் இந்த தொடருக்கு இருக்கையில், தற்பொழுதே இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்து பேச்சு வார்த்தைகள், முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்களிடம் ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, இந்தியா பாகிஸ்தான் போட்டி தரமானதாக இருக்காது, இந்தியா ஏற்கனவே மோதிய உலகக் கோப்பை மொட்டிகளில் ஒரு தலைபட்சமாக வெகு சுலபமாக பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது, எனவே இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி தான் மிகவும் தரமானதாக இருக்கும் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் கங்குலியின் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷீத் அலி
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இந்தியாவின் சாலைகள் காலியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி, கங்குலி எங்களோடு மைன்ட் கேம் விளையாடுகிறார் என்று கூறியிருக்கிறார்.

மிகச் சாதாரணமான ஒரு தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதினாலே, அது உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டியாக அமையும். அந்தப் போட்டி உலகத்தின் எந்த மைதானத்தில் நடந்தாலும் ரசிகர்களால் நிரம்பும். பெரிய அளவில் பணம் புழங்கும்.

- Advertisement -

இப்படி இருக்க இந்த முறை ஒரு உலகக் கோப்பையில், அதுவும் இந்தியாவில் வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுகிறது எனும் பொழுது, இந்தப் போட்டிக்கான மதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்தக் காரணத்தால் இந்த போட்டியை சுற்றி நிறைய சூடும் கிளம்பி இருக்கிறது.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இந்த போட்டி குறித்து பேசும் பொழுது ” நாம் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் அது வெறும் ஒரே ஒரு ஆட்டம். ஒரு அணியாக நாம் உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று யோசிக்க வேண்டும். நம்முடைய அனைவரின் நோக்கமாக அதுவே இருக்க வேண்டும்.

நான் முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன். அதனால்தான் நான் மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருக்கிறேன். நான் முழு உடல் தகுதியில் இருக்காவிட்டால், என் பெயர் அணியில் இடம் பெற்று இருக்காது. நான் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடுகிறேன். கிளப் அணிக்காக அல்ல!” என்று கொஞ்சம் காட்டமாகவே தெரிவித்திருக்கிறார்!