உலககோப்பை அட்டவணையில் மாற்றம்.. இந்தியா vs பாக் ஆட்டம் புதிய தேதி இதோ!

0
113

ஐசிசி கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இதில் அனைவரும் இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும் என்று தான் எதிர்பார்த்தார்கள். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி இந்த போட்டி நடைபெறும் என ஏற்கனவே அறிவுப்பு வெளியானது.

இதனை நம்பி பல ரசிகர்களும் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களில் புக் செய்து விட்டார்கள். இந்த நிலையில் அன்று நவராத்திரியின் முதல் நாள் என்பதால் போட்டியை மாற்றக் கூறி போலீசார் பிசிசிஐக்கு அறிவுறுத்தினர். இதனை அடுத்து இந்த போட்டியுடன் அட்டவணையிலும் சில மாற்றங்கள் நிகழ உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 15க்கு பதிலாக அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பாகிஸ்தானின் சில ஆட்டங்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகள் போதும் ஆட்டம் அக்.6 ஆம் தேதி  ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அக்டோபர் 10ஆம் தேதி பாகிஸ்தானும் இலங்கையும் மோதும் ஆட்டம் அதே  மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் முன்பு அறிவிக்கப்பட்ட அட்டவணையில் 12 ஆம் தேதி நடைபெற இருந்தது.

தற்போது அது பத்தாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் தேதி அன்று இங்கிலாந்தும் வங்கதேசமும் தர்மசாலாவில் மதியம் இரண்டு மணிக்கு மோத இருக்கிறார்கள். அந்த போட்டியும் மாற்றப்படும் என தெரிகிறது.

- Advertisement -

இதேபோன்று வேறு சில மாற்றங்களும் அட்டவணியில் நிகழ்கிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ புதிய அட்டவணையில் வெளியிடப்படும் என தெரிகிறது. இன்னும் பத்து நாட்களில் உலகக் கோப்பை தொடர்கான டிக்கெட் அனைத்தும் விற்பனைக்கு தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது