என்ன மன்னிச்சிடுங்க.. தெரியாம சொல்லிட்டேன்.. கோலி விவகாரத்தில் குசல் மெண்டீஸ் விளக்கம்

0
15760

கடந்த வாரம் முழுவதும் கோலி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குஷல் மெண்டிஸ் தற்போது தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விராட் கோலி 49-வது சதத்தை அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

அதற்கு உலக ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறிவந்தனர். அப்போது வேறொரு இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்ட குசல் மெண்டிசிடம் விராட் கோலியின் சாதனை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த குசல் மெண்டீஸ், விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று திமிராக பதில் அளித்தார். இந்த நிலையில் குசல் மெண்டிஸ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.அதில், நான் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது விராட் கோலி 49 வது சதம் அடித்தது குறித்து எனக்கு தெரியவில்லை.

அந்த நேரத்தில் தான் செய்தியாளர் ஒருவர் திடீரென்று விராட் கோலி குறித்து கேள்வி கேட்டார். அதனால் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மேலும் அந்த கேள்வியும் எனக்கு அப்போது புரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதம் அடிப்பதெல்லாம் சுலபமான காரியம் கிடையாது.

நான் அப்போது சொன்னது தவறு தற்போது அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குசல் மெண்டிஸ் கூறியுள்ளார். இலங்கை அணியின் தற்காலிக கேப்டனாக உலகக் கோப்பை தொடரில்  செயல்பட்ட குசல் மெண்டிஸ் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தோற்றத்திற்கு அவருடைய தவறான கேப்டன்ஷிப் தான் காரணம் என்றும் ரசிகர்கள் அடித்து வருகிறார்கள். மேலும் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியை ஐசிசி சஸ்பெண்ச் செய்துள்ளது. கேப்டன் சனக்கா காயம் காரணமாக இன்னும் குணம் அடையவில்லை. இதனால் தற்காலிக கேப்டனாக பல பிரச்சனைகளை அவர் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.