இன்று துவங்கிய துலீப் டெஸ்ட் டிராபியின் ஒரு போட்டியில் ருதுராஜ் தலைமை தாங்கும் இந்தியா சி அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கும் இந்தியா டி அணியும் மோதிக் கொள்ளும் போட்டி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா டி அணி வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மீண்டும் பரபரப்பான சென்ட் ஆப் ஒன்றை செய்திருக்கிறார்.
நடப்பு துலீப் ட்ராபிக்கு ஏ, பி, சி, டி என மொத்தம் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டது. இந்த அணிகளுக்கு கில், அபிமன்யு ஈஸ்வரன், ருத்ராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என நான்கு கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சர் படேல் அசத்தல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சி அணியின் கேப்டன் ருதுராஜ் வந்து வீசுவதாக அறிவித்தார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்க இந்தியா சி அணி ஆறு விக்கெட்டுகளை 48 ரன்கள் எடுப்பதற்குள் இழந்துவிட்டது. எனவே நூறு ரன்களில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தனி ஒரு வீரராக போராடிய அக்சர் படேல் அதிரடி காட்டி தலா 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 118 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சி தரப்பில் வைசாக் விஜயகுமார் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
ஹர்ஷித் ராணா சர்ச்சை
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்தியா சி அணிக்கும் அதிர்ச்சியை காத்திருந்தது. தொடக்க வீரராக வந்த தமிழகத்தின் சாய் சுதர்சனை ஹர்ஷித் ராணா 7 ரன்களில் வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ருதுராஜை ஸ்லிப்பில் 5 ரன்களில் வெளியே அனுப்பினார்.
இதையும் படிங்க : டிராவிட் கோச்சா மனுசனா அருமையானவரு.. ஆனா கம்பீர் அதுல ஒன் சைடுதான் – ரிஷப் பண்ட் ஓபன் பேச்சு
அப்போது கேப்டன் ருதுராஜை பறக்கும் முத்தம் கொடுத்து ஹர்ஷித் ராணா சென்ட் ஆப் பண்ணினார். ஐபிஎல் தொடரில் மூத்த வீரர் மயங்க் அகர்வாலுக்கு இதையே செய்தான். தற்பொழுது இன்னொரு சீனியர் வீரர் ருதுராஜுக்கும் இதையே செய்திருக்கிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இது பெரிய சர்ச்சையாக மாறி இருந்தது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தற்பொழுது இந்த முறையும் இது சர்ச்சையான விஷயமாக பார்க்கப்படுகிறது.