இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் பெருமையாக நடந்து கொள்வதோ அல்லது ஏதாவது செய்தால் அதற்காக நாடகமாடுவதோ எதையும் செய்யாத மிகச்சிறந்த வீரர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஷ் ராஜா பாராட்டி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருது பெற்றார். மேலும்சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சதம் அடித்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இயான் போத்தமுக்கு மிக அருகில்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களில் உச்சத்தில் இருப்பவர் இயான் போத்தம். இவருக்கு மிக நெருக்கத்தில் இரண்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து வருகிறார். ஆனாலும் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு ஆல் ரவுண்டராக புள்ளிவிபரங்கள் காட்டிய பொழுதும் கூட கிரிக்கெட் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுகுறித்து பேசி இருக்கும் ரமிஷ் ராஜா கூறும் பொழுது “இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எப்படி ஆதரவளித்தார்கள் என்று பாருங்கள். முதல் இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சுழற் பந்துவீச்சாளர்கள் வந்தார்கள்.முதல் டெஸ்டில் தன் சொந்த மண்ணில் சதம் அடித்தார். மேலும் ஆறு விக்கெட் கைப்பற்றினார். ஆனால் அவருக்கு டெஸ்ட் ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை”என்று கூறியிருக்கிறார்.
அஸ்வின் நாடகமாட மாட்டார்
மேலும் பேசிய ரமிஷ் ராஜா “அஸ்வின் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. அவர் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சதம் அடிக்கிறார். தேவைப்படும் பொழுதெல்லாம் விக்கெட் எடுக்கிறார். அவர் இதற்காக பெருமையை காட்டியது கிடையாது. சதம் அடித்தாலோ அல்லது ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் மிகையாக களத்தில் அவர் நாடகத்தை ஆடுவதும் கிடையாது”
இதையும் படிங்க : ரோகித் மனநிலை அந்த மாதிரி.. வலைப்பயிற்சியா போக வேண்டியத வெற்றியா மாத்திட்டாரு – பிராட் ஹாடின் பேட்டி
“வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத அணியாக இந்தியா இருக்கிறது. இதுபோன்ற வலிமையான அணிக்கு எதிராக நெருக்கடி கொடுக்க வங்கதேசம் மிகவும் போராட வேண்டி இருந்தது. இந்தியாவிற்கு செல்லும் எந்த ஒரு அணிக்கும் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது கனவாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.