பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறையை முக்கிய காரணமாக இருந்தது என ஆஸ்திரேலிய முன்னாள் துணை கேப்டன் பிராட் ஹாடின் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி அதிரடியான முறையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று பல சாதனைகளை படைத்தது, கிரிக்கெட் உலகில் பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இதனால் இந்திய அணியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இரண்டாவது டெஸ்ட் வெற்றி குறித்து ரோஹித் சர்மா
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது பற்றி பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது ” நாங்கள் போட்டியில் 2 1/2 நாட்களை மழையின் காரணமாக இழந்ததும், அவர்களை சீக்கிரத்தில் ஆல் அவுட் செய்து நாங்கள் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்று பார்க்க விரும்பினோம்.அவர்கள் 230 ரன்கள் எடுத்த போது அது ரன் பற்றியது கிடையாது, எவ்வளவு ஓவர்கள் இருக்கிறது என்பதை பற்றியானதாக எங்களுக்கு மாறியது”
“அந்த ஆடுகளத்தில் அப்படி ஒரு ஆட்டத்தை உருவாக்குவது என்பது சிறந்த முயற்சி. நாங்கள் சீக்கிரத்தில் ஆல் அவுட் ஆவதற்கான ஆபத்துகள் அதிலிருந்து. இருந்தபொழுதும் நாங்கள் தெரிந்தே இந்த முடிவை மேற்கொண்டோம். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருமே இந்த முடிவை உடன்பட்டு வந்து செய்து முடித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
வலைப் பயிற்சியாக கூட போய் இருக்கலாம்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மாவின் மனநிலை எப்படி ஆனது? என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் துணை கேப்டனான பிராட் ஹாடின் பாராட்டி பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க : யார் என்ன சொன்னாலும் இப்படித்தான் செய்வேன்.. என் கேப்டன்சி இந்த மாதிரி தான் – ரோகித் சர்மா பேச்சு
“ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இருந்து முதலில் வெற்றி பெற நினைக்கிறார். மற்றவை எல்லாம் இரண்டாவதாகத்தான் வருகிறது. அவர்கள் பேட்டிங் செய்வதற்கு வலை பயிற்சியாக எடுத்துக்கொண்டு மிகச் சுலபமாக டிராவை நோக்கி சென்று இருக்க முடியும். ஆனால் இந்திய அணி முடிவை நோக்கி போய் வெற்றி பெற்றதற்கு ரோகித் சர்மாவின் மனநிலையைத் தவிர வேறு எதுவும் முக்கிய காரணமாக இல்லை” என்று கூறி இருக்கிறார்.