இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 மேட்ச் தொடங்குவதற்கு முன்பாக, சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அணி மேனேஜ்மெண்ட் ஒரு சில மேட்ச்களில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு உடனடியாக அவரை டிராப் செய்வது பிளேயரின் மனநிலையைப் பாதிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “வேர்ல்ட் கப் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, இங்கிலாந்தில் ஒரே ஒரு மேட்ச்சில் ஃபெயில் ஆனதற்காக சஞ்சு சாம்சன் டிராப் செய்யப்பட்டார். தனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்படுகிறது என்று அவர் கடினமான மென்டல் பேட்டில் சந்தித்துக் கொண்டிருப்பார். அவர் நன்றாக விளையாடும்போது கொண்டாடுபவர்கள், ஒரு மேட்ச்சில் ஃபெயில் ஆனால் உடனே பிரஷர் போடுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் விஜய் சங்கர் பேசும்போது “சஞ்சு சாம்சன் அல்லது எந்த பிளேயராக இருந்தாலும் தொடர்ந்து ஐந்து மேட்ச்களாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் ரிசல்ட் கிடைக்கும். ஒவ்வொரு மேட்சிலும் ரன் அடித்தே ஆக வேண்டும் என்ற ஃபெயர் உடன் விளையாடுவது மிகவும் கஷ்டம். வேர்ல்ட் கப் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் தேவை” என்று கூறி இருக்கிறார்.






